எல்லோருக்கும்

மனிதர்களின்
சுயநலம் வெறுத்து
தனிமையினை
தேடி அலைந்து
மனித சஞ்சாரமற்ற
மலையுச்சில்
அமர்ந்த போது
ஊரின் அமைப்பு
கண்களுக்கு
அழகானது - மனம்
நன்றி சொல்ல
துடித்தது
எல்லோருக்கும்

சுடிதார்


மூன்று
மணிநேரம்
துணிக்கடையினை
புரட்டிப்போட்டு
அலசி ஆராய்ந்து
வாங்கிய சுடிதார்-
உன் கலருக்கு
சரியில்லை யென்று
சாதாரணமாக
சொல்லி விட்டாள்
தோழி

அருமைப்புருஷன்



நேற்று இரவு
சண்டைக்கு  சமாதானம்
பேசாமல் சமையல்
செய்யும் போது
பூனை போல
பின்னால் நின்று
கேட்டான் ஒரு
கப் காபி
அருமைப்புருஷன்

செல்லாது


அவள்
பேசுவதெல்லாம்
பொய்யென்றே
அறிந்த பின்பும்
தலையாட்டிய படி
கேட்டுக்கொண்டேன்
மனைவியிடம்
எதிர்ப்பு
செல்லாது

தமிழ்


பொதிகையில்
பிறந்து
முச்சங்கத்தில்
தவழ்ந்து
கடல் கடந்தும்
பயணப்பட்டு
இன்றும் தன்
இளமையுடன்
உலகமெல்லாம்
பரந்து விரிந்து
இயல் இசை
நாடகத்தால்
 பறைசாற்றுகிறது
அன்பினை
அன்னை மொழி
 தமிழ்

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...