ஈரோடு நகரத்தில் ஸ்ட்ரைக்சர் எடுத்து வர தாமதம் ஆனதோ அல்லது வேறு எதுவும் காரணமாக என்பதை நானறியேன்.. ஆனால் தனது வயதான ஏழை தாயை தூக்கி செல்லும் மகளின் பாசம் தான் இந்த கட்டுரை எழுத காரணம்.
சினிமா நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் அரசியல்வாதிகளை கொண்டாடும் நாம் சில நிமிடங்களுக்கு இந்த பெண்ணின் வலியை கடந்த வலிமையை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது மட்டுமல்ல...
சந்திரனில் சென்று தண்ணீரை தேடும் நாம் இயற்கை படைத்த அன்பான வாழ்வை விட்டு விலகி செல்ல வைத்த இயந்திரதனத்தை மறந்து...
இந்த அன்பையும் பாசத்தையும் கொண்டாட வேண்டியது கட்டாய தேவை.
பல குடும்பங்களில் இன்று கோடி கோடியாக ரூபாய் இருந்தும் பாசமில்லாத நிலை இருக்கிறது.. ஆனால் இந்த இருவரிடமும் இருக்கும் பாசபான பிணைப்பிற்கு ஈடுஇணையில்
லை
அவள் ஏழையா...பணக்காரியா
எல்லாரும் பணத்தை தேட அலையும் உலகில் இதோ இங்கே ஒருவள் தனது தாயை தூக்கி கொண்டு செல்கிறாள்.
இவள் என்ன ஜாதி மதம் என்று கூட ஆலோசனையும் மனிதர்களும். இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு தெரியாதே. உலகில் பத்து மாதம் சுமந்து பெற்றவளை ஸ்ட்ரகசர் இல்லை என்பதை பொருட்டு படுத்தாமல் அவளை அந்த வயதானவளுக்கு தாயாக மாறிவிட்டாள்..
ஆம் பத்து மாதம் சுமந்து பெற்றவளகன் வலியை விட மிகவும் கொடியது தான் இந்த வலி..
அந்த தாயை தூக்கி செல்லும் போதும்..மிகவும் தைரியசாலியை போலவே தூக்கி செல்கிறாள் அந்த சகோதரி.
பெண் விடுதலை பெண்ணியம் புதுமை பெண் என ஆயிரம் பேசி அதிகாரத்தை கையிலெடுத்தாலும்...பெண்ணின் பலமே அவளின் பாசம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபணம் செய்து விட்டாள் இந்த சகோதரி
ஆம்...இந்த நேரத்தில் உடனிருந்து உதவ ஆண் மகன் இல்லையே.. அம்மா.. என்னை பெற்ற போது நீ எத்தனை வலிகளை சுமந்தாயோ தெரியாது ஆனால் உன்னை சில நொடிகள் சுமந்து சென்றால் நான் ஓன்று குறைந்து விட மாட்டேன்...
என்னை போற்றி வளர்த்த உன்னை தள்ளாத வயதில் தாங்கிப் பிடிக்கிறேன்..என்ற படி மகள் தாயாகி நிற்கிறாள்..
கோடி கோடியாக பணம் சேர்த்த பிறகும் இன்னும் இன்னும் என கோடிகளை சுருட்டிக் கொண்டு வாழும் மனிதரில் இவள் மிகவும் உயர்ந்தவள் தான்.
மனிதன் படைத்த பணத்தை விட தன்னை படைத்த தாய்மையின் வயிற்றிலும் தாய் மிகவும் புண்ணியவதி நெஞ்சிலும் வலியை தாண்டிய சந்தோஷம் வந்திருக்கும்...
பெண்ணே உன்னை போல் மகளை பெற்ற
தாய் மிகவும் புண்ணியவதி..
என்ன தவம் செய்தாளோ உன்னை போன்ற ஓர் பாசக்கார பெண்ணை பெற்ற தாய்