ரக்க்ஷா பந்தன்

 போடி கிறுக்கி 

அடிக்கடி அவன் 

சொல்லும் வார்த்தை.. 

டியூஷன் க்ளாஸிலும் 

எனக்காக சண்டை செய்து 

கோபக்காரன் என்றே 

பெயரெடுத்த பாசக்கார 

அண்ணன் அவன்... 

ஆசையாக கேட்பதற்காக 

சுவர் ஏறி குதித்து 

பூவை பறித்து நாய் 

விரட்டி உருண்டு எழுந்து 

வந்தவரின் கையில் 

புத்தம் புதிதாக அந்த மலர்ந்த பூ... 

அம்மா கேட்டா சைக்கிள்ல 

இருந்து விழுந்தேன் சொல்லு...வெகுளியாக 

வெள்ளந்தியாக சிரித்தவன்...

கேட்கும் முன்பே 

எல்லாமும் வாங்கி தந்தான்... 

முதல் மாத சம்பளத்தில் 

வாங்கி கொடுத்த வாட்ச் 

அவனின் கைகளில் 

அணிவித்த போது இருவரும் உணர்ச்சியின் பிழம்பாய்

 எரிமலைபோலவே கண்ணில் எட்டிப்பார்த்த பனித்துளி.... 

தெருவில் சென்று 

நின்று கொண்டே 

அனைவரிடமும் காட்டி 

மகிழ்கிறான் அந்த சில 

நூறு ரூபாய் பொருளை 

கோடி ரூபாய் போலவே... 

இவனைப் போலவே 

ஓர் அண்ணன் கிடைப்பது அரிது..

.

.

Raman Sankar Qoutes

அன்பை விதைப்போம்

 அன்பை விதைப்போம்...

.


போர்களும் வேண்டாம்...

போர்களமும் வேண்டாம்...

போர்கள் ஏற்படுத்திய

வலிகளை சரித்திரம்

கண்டுவிட்டது....

மகாபாரதம் தொடங்கி...

கலிங்கம் தொண்டு....

சாம்ராஜ்யங்கள் சரிந்த

போர்க்களம் வேண்டாம்...

இன்று போய் நாளை வா 

என்றே அசுரனின் மனதை

மாற்ற நினைத்த தமிழர்களின்

குறிஞ்சி நில கடவுளாம்

கந்தனைப் போல 

பகையை வெறுப்போம் 

பகைவரை அல்ல....

அசுரனின் குணத்தையும்

மாற்றி சேவலும் 

மயிலுமாக அமர வைத்து

கடற்கரைக்கு அழகு சேர்த்த

குமரனைப் போலவே

அழகு பார்ப்போம்...

புத்தன் இயேசு வழியில்...

அன்பின் வழியில்

அன்பை விதைப்போம்...

Raman Sankar

 Hi to All,

I like to introduced myself a writer. (I think so, only others can confirm this)

It's always a great experience, while trying to capture thoughts through writings.

Sharing writings (hoping so)will provide more happiness to all

The every reason hidden behind indian culture with strong human values.

we invite more relatives and friends at our every functions, so that it will .

spread happines and  make others smile.

I'm not a saint nor moral teacher nor philosopher to changes on others life.

But  if my writings may make a small repercussion on viewer's mind. I'm writing what I felt are visualized.

Yes, in today's corporate work culture we are putting more and more pressure on ourselves and others, by comparing with others social, economic and other parameters.

My blogger aim is to make you realise your day to day acitvity, in very normal manner.

So that you may overcome your unwanted pressure,which was forced by external person or work.

Always be happy and spread happiness.

Thanks and Regards,

Raman Sankar

விஷ்ணு துர்க்கை

வர வேணும்

வர வேணும்

எங்க துர்க்கை அம்மா..

எங்கள் குலம் காத்திடவே

வர வேணும் வர வேணும்

எங்க துர்க்கை அம்மா..

பக்தர்களை காத்திடவே...

பரிவுடனே வர வேணும்

எங்க துர்க்கை அம்மா

விவசாயம் செழித்திடவே

வியாபார பெருகிடவே...

வர வேணும் வர வேணும்

எங்க துர்க்கை அம்மா

வாடியம்மா காக்கின்றே‌ தாயே

ஏழைகளை காத்திடவே

ஏற்றங்களை தந்திடவே

வர வேணும் வர வேணும்

சிரித்தபடி வந்திடம்மா

எங்க துர்க்கை அம்மா

கன்னி பெண்ணாக

எங்களை காத்திடும்

எங்க துர்க்கை அம்மா

ஆசையாக பாசமுடன்

நேசத்தையும் கலந்து 

வைத்து முளைப்பாரி

எடுத்து வந்தோம்

எங்க துர்க்கை அம்மா

எங்க துர்க்கை அம்மா

நல்வாழ்வு மலர்ந்திடவே

கவலைகளும் மறைந்திடவே

சீக்கிரமே நீ வந்திடம்மா

எங்க துர்க்கை அம்மா

சிங்கத்தின் மீதிமேறி 

புவனத்தை காத்திடவே

மகிழ்வுடனே வருபவளாம்

எங்க துர்க்கை அம்மா 

இவள் எங்களின் குலம் காக்கும் நடுக்கல்லூர் அமர்ந்தவளாம் 

எங்க துர்க்கை அம்மா

நம்பிக்கை வளர்த்திடவே

நம்பியின் தங்கையான

எங்க துர்க்கை அம்மா

இவ எங்க துர்க்கை அம்மா

ஆசையுடன் குலவையிட்டோம்

குலம் தழைக்க வைத்திடுவாய்

குற்றம் குறை அத்தனையும்

கனிவுடனே பொறுக்க வேணும்...

கனிஅமுத படைத்திடுவோம்...

அன்புடனே ஏற்றுக் கொண்டு

அருளாசி புரியவேணும்

இன்பங்களை தந்து நீயும்

இன்முகத்தை காட்டவேணும்

கண்ணிமைபோல் இரவு பகல் 

பாராமல் எங்களை காத்திடும்

துர்க்கையளே என் காலடியில்

வீழ்ந்து விட்டோம்.... முளைப்பாரி

எடுத்து விட்டோம்...நீயே சரணம் அம்மா

நடுக்கல்லூரில் வீற்றிருந்து 

அருளாட்சி செய்யும் எங்க 

துர்க்கை அம்மா.

எங்க துர்க்கை அம்மா....

குலவை சத்தம்...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...