வர வேணும்
வர வேணும்
எங்க துர்க்கை அம்மா..
எங்கள் குலம் காத்திடவே
வர வேணும் வர வேணும்
எங்க துர்க்கை அம்மா..
பக்தர்களை காத்திடவே...
பரிவுடனே வர வேணும்
எங்க துர்க்கை அம்மா
விவசாயம் செழித்திடவே
வியாபார பெருகிடவே...
வர வேணும் வர வேணும்
எங்க துர்க்கை அம்மா
வாடியம்மா காக்கின்றே தாயே
ஏழைகளை காத்திடவே
ஏற்றங்களை தந்திடவே
வர வேணும் வர வேணும்
சிரித்தபடி வந்திடம்மா
எங்க துர்க்கை அம்மா
கன்னி பெண்ணாக
எங்களை காத்திடும்
எங்க துர்க்கை அம்மா
ஆசையாக பாசமுடன்
நேசத்தையும் கலந்து
வைத்து முளைப்பாரி
எடுத்து வந்தோம்
எங்க துர்க்கை அம்மா
எங்க துர்க்கை அம்மா
நல்வாழ்வு மலர்ந்திடவே
கவலைகளும் மறைந்திடவே
சீக்கிரமே நீ வந்திடம்மா
எங்க துர்க்கை அம்மா
சிங்கத்தின் மீதிமேறி
புவனத்தை காத்திடவே
மகிழ்வுடனே வருபவளாம்
எங்க துர்க்கை அம்மா
இவள் எங்களின் குலம் காக்கும் நடுக்கல்லூர் அமர்ந்தவளாம்
எங்க துர்க்கை அம்மா
நம்பிக்கை வளர்த்திடவே
நம்பியின் தங்கையான
எங்க துர்க்கை அம்மா
இவ எங்க துர்க்கை அம்மா
ஆசையுடன் குலவையிட்டோம்
குலம் தழைக்க வைத்திடுவாய்
குற்றம் குறை அத்தனையும்
கனிவுடனே பொறுக்க வேணும்...
கனிஅமுத படைத்திடுவோம்...
அன்புடனே ஏற்றுக் கொண்டு
அருளாசி புரியவேணும்
இன்பங்களை தந்து நீயும்
இன்முகத்தை காட்டவேணும்
கண்ணிமைபோல் இரவு பகல்
பாராமல் எங்களை காத்திடும்
துர்க்கையளே என் காலடியில்
வீழ்ந்து விட்டோம்.... முளைப்பாரி
எடுத்து விட்டோம்...நீயே சரணம் அம்மா
நடுக்கல்லூரில் வீற்றிருந்து
அருளாட்சி செய்யும் எங்க
துர்க்கை அம்மா.
எங்க துர்க்கை அம்மா....
குலவை சத்தம்...
No comments:
Post a Comment