அன்பை விதைப்போம்...
.
போர்களும் வேண்டாம்...
போர்களமும் வேண்டாம்...
போர்கள் ஏற்படுத்திய
வலிகளை சரித்திரம்
கண்டுவிட்டது....
மகாபாரதம் தொடங்கி...
கலிங்கம் தொண்டு....
சாம்ராஜ்யங்கள் சரிந்த
போர்க்களம் வேண்டாம்...
இன்று போய் நாளை வா
என்றே அசுரனின் மனதை
மாற்ற நினைத்த தமிழர்களின்
குறிஞ்சி நில கடவுளாம்
கந்தனைப் போல
பகையை வெறுப்போம்
பகைவரை அல்ல....
அசுரனின் குணத்தையும்
மாற்றி சேவலும்
மயிலுமாக அமர வைத்து
கடற்கரைக்கு அழகு சேர்த்த
குமரனைப் போலவே
அழகு பார்ப்போம்...
புத்தன் இயேசு வழியில்...
அன்பின் வழியில்
அன்பை விதைப்போம்...
No comments:
Post a Comment