ரக்க்ஷா பந்தன்

 போடி கிறுக்கி 

அடிக்கடி அவன் 

சொல்லும் வார்த்தை.. 

டியூஷன் க்ளாஸிலும் 

எனக்காக சண்டை செய்து 

கோபக்காரன் என்றே 

பெயரெடுத்த பாசக்கார 

அண்ணன் அவன்... 

ஆசையாக கேட்பதற்காக 

சுவர் ஏறி குதித்து 

பூவை பறித்து நாய் 

விரட்டி உருண்டு எழுந்து 

வந்தவரின் கையில் 

புத்தம் புதிதாக அந்த மலர்ந்த பூ... 

அம்மா கேட்டா சைக்கிள்ல 

இருந்து விழுந்தேன் சொல்லு...வெகுளியாக 

வெள்ளந்தியாக சிரித்தவன்...

கேட்கும் முன்பே 

எல்லாமும் வாங்கி தந்தான்... 

முதல் மாத சம்பளத்தில் 

வாங்கி கொடுத்த வாட்ச் 

அவனின் கைகளில் 

அணிவித்த போது இருவரும் உணர்ச்சியின் பிழம்பாய்

 எரிமலைபோலவே கண்ணில் எட்டிப்பார்த்த பனித்துளி.... 

தெருவில் சென்று 

நின்று கொண்டே 

அனைவரிடமும் காட்டி 

மகிழ்கிறான் அந்த சில 

நூறு ரூபாய் பொருளை 

கோடி ரூபாய் போலவே... 

இவனைப் போலவே 

ஓர் அண்ணன் கிடைப்பது அரிது..

.

.

Raman Sankar Qoutes

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...