752 - அட்சய திருதியை

இந்த தலைப்பில் எழுதப் போகும் கதைக்கும் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதை பற்றியது அல்ல இந்த கதை.. ஆனால் அட்சய திருதியை நாளில் நகை வாங்க போகும் ஓர் குடும்பத்தில் நடக்கும் ஓர் நிகழ்வு பற்றியதே இந்த கதை.. விரைவில்..

அஞ்சு பவுன் நகை வாங்கணும் என்று இந்த மனுஷன்கிட்ட பத்து வருஷமா சொல்லிக்கொண்டே இருப்பேன்..ஏதோ இந்த தடவையாச்சும் உங்க அப்பன் வாங்கி கொடுத்தாரே அதுவே பெரிய விஷயம் 

அட அக்கா அங்கே பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுது 

ஏய் புள்ள அத்தான் அக்காவுக்கு நகை வாங்கி கொடுத்துக்கு தான் இந்த மழையே.. சுற்றி இருந்த மாமனார் மாமியார் கொழுந்தியா மச்சான் என அனைவரும் சிரிப்பாக சிரித்தனர்.

அட சரியா சொன்னீங்க போங்க..

ஆரவாரமான கூட்டத்தில் அவனை அனைவரும் மட்டம் தட்டி பேசினாலும் அவனுக்கு ஆறுதலாக யாருமே வாய்திறக்க வில்லை.

அப்போது இரு மெல்லிய கரங்கள் அவனை தொட்டு தன் பக்கமாக திரும்பியது..

அந்த இரு கரங்களின் சொந்தக்காரன் யார் என்று திரும்பி பார்த்த போது அவன் பெற்று எடுத்த இரு குழந்தைகள்.

அப்பா கொஞ்சம் குனிந்துச்கோ எதுக்கு பாப்பா.. அப்பா சங்கவி சொன்னதை கேளூ.. மகனின் சொல்லை கேட்டு குனிந்தான்..

அப்பா நீ அழாதே உன்னோட கஷ்டம் எங்களுக்கு புரியது என்றன்... பத்து வயது கூட நிரம்பாத சங்கவி மற்றும் ரமேஷ்...

அவனையும் அறியாமல் அவனுக்கு கண்ணீர் பெருகியது.. அப்பா எந்த கஷ்டம் வந்தாலும் அழக்கூடாது என்று சொல்லி தந்த நீயே இப்போ ஏன் குழந்தை மாதிரி அழுறே...

எனக்குத்தான் பேசத் தெரியலை நீங்களாவது நல்லா பேசி பழகுங்க அப்போ தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும்.. சரி... உங்களுக்கு அப்பா ஐஸ்கிரீம் வாங்கித்தரட்டுமா..

வேண்டாம்ப்பா..நீ ஏற்கனவே நிறைய காசு செலவு பண்ணிட்டே...

ஏய் மச்சான் இப்படி இங்கே வாங்க உங்க மாமனார் அதான் எங்க அப்பா உங்க எல்லோருக்கும் டீயும் வடையும் வாங்கி தரப்போறாராம்..

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த அந்த நகை கடை பஜாரில் சுற்றி நின்று கொண்டு இருந்த மக்கள் கூட்டம் அனைவரும் கேட்கும் படி சுந்தரேசன் சத்தமாக சொன்னான்.

அவனுக்கு மிகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.. தன்னோட பொண்டாட்டிக்கு பத்து பவுன் நகை வாங்கி கொடுக்க துப்பில்லையா என்ற ஆறு மாசத்துக்கு ஓர் முறை ஓவ்வொரு கல்யாண வீட்டிலும் அவமானபடுத்திய அதே மாமனார் இன்று தன் மகனை வைத்து இப்படி பலர் அறிய சொல்லுறாரே... அவனின் மனதில் எரிச்சலும் கோபமும் வந்தது.

ஆனால் டாக்டர் சொன்ன அறிவுரை மனதில் வந்து போனது சார் உங்க பொண்டாட்டிக்கு இதயத்தில் ஓர் சின்ன பிரச்சினை இருக்கு. அதனால் அவங்களை நீங்க மனசு கஷ்டப்படாம பார்த்துக் கொள்ளணும்.

அப்படி என்ன நோய் என்ன மருந்து இதையெல்லாம் விசாரணை செய்யும் அவளுக்கு நான் என்ன புத்திசாலியா... குடிகார அப்பா.. எப்போதும் சண்டை சச்சரவு என்று வீட்டில் இருந்த காரணமாக படிக்க பிடிக்காமல் போனது.

அவர் குடிகாரனா இருந்தாலும் ஊரில் சிறந்த பள்ளியில் தான் தன் மகனுக்கு சீட் வாங்கி கொடுத்தார்.

டேய் அரவிந்த் இந்த தெருவில் இருக்கிற எல்லா பிச்சைகார பயலுக்கு நீதான்டா போய் சொல்லணும்.. என் பையனுக்கு எல்.கே.ஜி சேர்த்து இருக்கேன்..ஏதா என்னால் முடியாது என்று கேலி பேசினாராமே உங்க சகலைப்பாடி ரஞ்சித்...

இப்போ பார்த்தீயா..சுளையா 50,000 கொடுத்தேன்...பிரின்ஸ்பால் உங்க பையனுக்கு இல்லாத சீட் வேற யாருக்கு கொடுக்க போறோம் என்று காலில் விழாத குறையா எழுந்து நின்று பேசினான்டா..


டேய் பிச்சைக்கார பயலுகளா...எவனாவது எல்.கேஜி -க்கு தன் பையனுக்கு 50,000 கொடுத்து இருக்கீங்களா...போதை தலைக்கு ஏறியது நன்கு வேலை செய்து கொண்டு இருந்தது... அந்த தெருவில் இருந்த எல்லோருமே மாத சம்பள வேலைக்கு செல்லும் உயர் ஜாதி வகுப்பை சார்ந்தவர்கள்..

மாத சம்பளம் வேலைக்கு போகிறவன் தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஓர் அற்ப தனமான சிந்தனை கொண்ட மக்கள்.

ஆனால் பரந்தாமன் அப்படிஇல்வை கிடைச்ச வேலையை நல்லா செய்யணும் அதுக்கு முதலாளி பார்த்து கொடுக்கும் காசை எந்த சத்தமும் இல்லாம வாங்கி கொண்டு வந்து பொண்டாட்டி கையில் முழுவதும் கொடுக்கணும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருந்தான்.

இதெல்லாம் ஆறு மாசத்துக்கு முந்திய கதை.அப்போது சாராய கடை தெரியுமா என்றால்.. சாராயமா அப்படின்னா அது என்னது ..அதை பயன்படுத்தினா வாழை நல்லா வளருமா என்று தான் கேட்டு இருப்பான் ஆனால் இன்றோ அவன் ஓர் ஊருக்கு வேலைக்கு போய் வருகின்றான் என்றால் அந்த ஊரில் இருக்கும் எல்லா சாராய கடையும் அவனுக்கு அத்துப்படி.

ஏன் எப்படி எதனால் இப்படி பரந்தாமன் மாறிப் போனார்..பரந்தாமனுக்கும் இன்று தங்க நகை வாங்கி யவனுக்கும் என்ன சம்பந்தம் அறிந்து கொள்ள காத்திருங்கள் கதை தொடரும்...

751 - பத்மபூஷன் விருது அஜித்

 சரியான நேரத்தில் சரியாக வந்து சேர்ந்து இருக்கிறது இந்த மதிப்பிற்குரிய விருது அஜித் அவர்களுக்கு .

சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் அஜித் 

சினிமாவில் சேர்ந்த சில ஆண்டுகளில் அவரை ஓர் வார பத்திரிகை பேட்டி எடுத்து போதே சொன்னார். எனக்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை அடையணும் அது தான் என்னோட ஆசை லட்சியம் என்று.

பத்திரிகை நடத்துபவர்களுக்கு தங்களின் வியாபாரத்தை சிறப்பாக செய்ய தெரியும் என்பதை அறியாமல் கள்ளமில்லாத மனதுடன் அவர் அன்று சொன்ன வார்த்தைகளை அவருக்கு எதிராக பேச வைத்தது சிலர்.

அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா..ஜம்பது படம் கூட முழுசா முடிக்கலை அதுக்குள்ள இவருக்கு சூப்பர் ஸ்டார் ஆகணும் என்று ஆசையா கேலியும் நய்யாண்டியும் பேசிய சிலர் .

அவர் மீண்டும் மீண்டும் தெளி படுத்தினார். பத்திரிகைகாரங்க பேட்டி எடுக்கும் போது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கேன்.. யாரா இருந்தாலும் தான் இருக்கும் துறையில் இருக்கும் உச்சபட்ச நிலையை அடைய நினைப்பது தவறா.. இங்கே எல்லோருக்கும் சூப்பர் ஸ்டார் கனவு இருக்கு. அதை வெளியே சொல்ல பயப்படுறாங்க 

எனக்கு அந்த பயமில்லை அதனால் தைரியமாக சொல்லுறேன்.. நிச்சயமாக எனக்கு அந்த தகுதி இப்போ வேணா இல்லை என்று சிலர் விமர்சனம் பண்ணலாம் நிச்சயமாக என்னோட தகுதி திறமையை வளர்த்துக் கொண்டு நிச்சயமாக நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்றார்..

பல முறை இவரை தலை கனம் பிடித்தவர் இவருக்கு பேச தெரியாது என விமர்சகர்கள் வந்த போது..சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியே நின்றார்.. தனக்கு பிடித்தமான விமானங்கள் சார்ந்த விஷயத்தை பொழுது போக்காக செய்தார்..

இவரை இழித்தும் பழித்தும் பேசிய அதே மனிதர்கள் அஜித் ஏன் இப்போ படம் பண்ணுறதில்லை என்று யோசிக்க வைத்தார்.. சில ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் எடுத்து வைத்த ஓவ்வொரு அடியும் வெற்றி படிக்கட்டுகளாக மாறிப்போனது.

எந்த பத்திரிகை எல்லாம் அஜித் வாய் துடிக்கானவர் என எழுதியதோ அதே பத்திரிகைகள் அவரின் வீட்டு வாசலில் சென்று அவரை பேட்டி காண துடித்தன.ஆனால் மனிதர் தனது அமைதியும் புன்னகையும் பதிலாக தந்தார்.


இன்றும் கூட விமான நிலையத்திலும் சார் ஓரே ஓர் பேட்டி...என அவரை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து தங்களின் டி.ஆர்.பி எகிற வைக்க முயற்சி செய்யும் பல ஊடக நண்பர்கள்.. சிலர் செய்த தவறுகள் அவரின் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது என்பது தான் யதார்த்தமான உண்மை.


ஓர் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த அனைவருக்கும் இருக்கும் ஆர்வம் ஆசை இவைகளை அன்று அவர் சொன்னதை ஊடகங்கள்  பேசி பிரச்சினையாக்கியது, விளைவு மனிதர் அமைதியாக விலகி நின்று தனது செயல்களால் உலகை திரும்பி பார்க்க வைக்கிறார் 

இன்றோ மாபெரும் வெற்றியை பெற்று விட்டார்..இதை பற்றி பேட்டி எடுக்க பல பத்திரிகைகளில் போட்டி நடைபெறும்.. ஆனாலும் அஜித் எந்த ஓர் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க மாட்டார் என்றே கோடிக்கணக்கான அஜித் அவர்களின் ரசிகர்களில் ஓருவனாக நினைக்கிறேன்.


ஓர் வேளை அவர் தனது மெளனத்தை விடுத்து மீண்டும் பேட்டி கொடுத்தால், அதனால் மிகப்பெரிய சந்தோஷம் அடையும் ஓர் சாதாரண அஜித் ரசிகன் நான்.


ஆமாம் ஓர் வேளை அவர் எதாவது பேசினால் அது கூட மிகவும் தன்னம்பிக்கை தரும் உற்சாகமாக சொற்களாகவே. இருக்கும்.


நிச்சயமாக அதில் அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கவே இருக்காது.. ஆனால் அதை பிற ஊடகங்கள் அரசியலாக ஆக்காமல் இருக்க வேண்டுமே என்ற அச்சமும் இருக்கிறது..


ஏனெனில் அஜித் என்ற பெயரை வைத்து தான் இங்கே பலர் கோலி விளையாட நினைக்கின்றனர் ஆனால் அவரோ யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் தர நினைக்காமல் தான் உண்டு தனது வேலையுண்டு என்றே தனித்த சுதந்திரமான வழியில் வாழும் ஓர் அற்புதமான மனிதர் 

750 - புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

 வயதான தாத்தா ரோட்டில் விழுந்து கிடந்தார்.. கிழட்டு மனுஷ வீட்டுல சொல்லாம வந்நிருப்பாரூ என எக்காளம் செய்து சென்ற சிலர்... ஓர் சிறுவன் ஓடிப் போய் அவரை கை பிடித்து தூங்கிவிட்டான்...நீ நல்லா இருக்கணும் தம்பி என்றுவுடன் தாத்தா நீங்க சாப்பிட்டீங்களா என்ற போது அவரின் கண்கள் கலங்கியது கொஞ்சம் பொறுங்க...சில ஐம்பது ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்தான்... டேய் இது விளையாட்டு போட்டிக்கு நீ சேர சொல்லி கொடுத்தது... எனக்கு தெரியும் நீ சும்மா இரு நண்பனை கட்டுபடுத்தினான்...தம்பி உனக்கு என தாத்தா கேட்டார்.. என்கிட்ட சேமிப்பு பணம் கொஞ்சம் இருக்கு.. அதை எடுத்து பணத்தை கட்டி விடுவேன்.. நீங்க போய் சாப்பிடுங்க தாத்தா...தெருவில் 

சுற்றி இருந்த அனைவரும் உதவி செய்யாத போதும் சிறுவன் உதவி செய்தார்...ஏன்டா நீ இப்படி பண்ணிணே என நண்பன் கேட்டதற்கு டேய் என்னோட தாத்தா மாதிரியே இருந்தாரூ டா அதான் என பேசிய படி இருவர் சென்றனர்.

.. தூரத்தில் பாட்டு சத்தம் கேட்டது... புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக

749 - எனக்கு நீங்க கடவுளை காட்டுவீங்களா..

 சாமியார் வேஷத்தில் தான் சந்திக்கும்  எல்லோரிடமும் உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியுமா என விவேகானந்தர் கேட்பார்.. அதில் பலர் நானே கடவுள் என்றனர்.சிலர் கடவுளை எல்லாம் உடனே பார்க்க முடியாது அதற்கு பக்குவம் வரணும் நீ கொஞ்ச நாட்கள் என்னுடனே தங்கிஇருந்து எனக்கு சேவகம் செய்யணும் அப்படி செய்தால் தான் என்னால் உன்னை நன்கு புரிந்து கொண்ட பிறகே கடவுளை காட்டுவேன் என்ற சிலர்.. கடவுள் பார்க்கணும் என்றால் சில விஷேச பூஜைகள் செய்யணும் அதுக்கு செலவு ஆகும் பரவாயில்லையா என்ற சிலர்... இந்த கேள்வியை பலரிடம் கேட்ட விவேகானந்தர் இனிமே கடவுளை பார்க்கவே முடியாது என்று முடிவுக்கு வந்தார்.. ஆனாலும் கொல்கத்தாவின் கங்கை கரையில் ஓர் பிச்சைக்காரன் இருக்கான் சில நேரங்களில் தான் கடவுளை பார்த்ததாக புலம்புவது உண்டு என சிலர் சொல்ல கேட்டு கல்கத்தா சென்றார்.. எத்தனையோ நபரிடம் கேட்டு விட்டோம் ஆனாலும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கவே இல்லை என மனதிற்குள் நினைத்த நரேன்.எதற்கும் இவரிடமும் இந்த கேள்வியை கேட்டுப் பார்ப்போம் என்ற கேட்டார்.. சந்தித்து சில நொடிகளில் உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியுமா என கேட்டார் 


வழக்கமான பலர் பேசிய பொய்யான பசப்புரைகளோ அல்லது காசு கொடுத்தால் தான் பார்க்க முடியும் என்றோ அல்லது நீ எனக்கு கொஞ்ச காலம் சிஷ்யன் போல் அடிமையா இரு பிறகு கடவுளை உனக்கு காட்டுவதற்கு உனக்கு தகுதி இருக்கா என நான் தெரிஞ்சுகிறேன் என்றோ சொல்லாமல்.

மிகவும் யதார்த்தமான மந்தகாசமான புன்னகையில் சொன்னார் 

என்னால் தேவியை உனக்கு காட்டமுடியுமா என்று தெரியாது.. நான் வழக்கமாக பண்ணுற விஷயத்தை உனக்கு சொல்லி தருகிறேன். .. அதுக்கு பிறகு உன்னோட இஷ்டம் என சொன்னபடி தன்னருகே அமர வைத்து தியானத்தை சொல்லி கொடுத்தார்..சில நொடிகளில் தியானத்தின் பரவச நிலைக்கு சென்ற விவேகானந்தரின் உடலை தொட்டு மீண்டும் சகஜ நிலைக்கு திருப்பிய ராமகிருஷ்ண பரமஹம்சர்.


சாஷ்டாங்கமாக அவரின் காலில் விழுந்து வணங்கிய விவேகானந்தர்...என்னை எதுக்கு இப்போ சாதாரண நிலைக்கு கொண்டு வந்தீங்க..நான் மீண்டும் தியானம் செய்ய போகிறேன் என்றார்...

பரமஹம்சர் அனுமதியின்றி செய்த போது அவரால் மனதை கட்டுபடுத்த இயலவில்லை.. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தியானம் கைகூடாமல் தவித்தார்.

சாமி எனக்கு மீண்டும் ஓர் முறை தியானத்தை அமைத்து கொடுங்கள் என்ற போது சிரித்தபடியே சொன்னார்.

நீ கடவுளை பார்க்கணும் என்று குழந்தை மாதிரி ஆசைப்பட்ட ஆனால் உனது உடலும் உள்ளமும் அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை.


இனிமேல் கடவுளை யாரிடமும் எனக்கு உங்களால் கடவுளை காட்ட முடியுமா என்று கேட்க மாட்டே தானே மந்தகாசமாக சிரித்த ராமகிருஷ்ண பரமஹம்சர்.


தன்னை மிகப்பெரிய திறைமைசாலி போலவும் இந்த உலகத்தையே காப்பாற்ற வந்த கிருஷ்ண பரமாத்மா போலவும் சிறு வயதில் நினைத்த விஷயங்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்..


நீ தனியாக தியானம் செய்யாதே என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பிறகும். கடவுளை பார்க்கணும் என்ற தணியாத ஆசையில் பல முறை ராமகிருஷ்ணருக்கு தெரியாமல் பல முறை தியானம் செய்ய முயற்சி செய்து தியானம் கைகூடாமல் . அவரின் காலடியில் விழுந்த வணங்கினார்.


எனக்கு மீண்டும் ஓர் முறை தியானத்தை அமைத்து தாருங்கள் சாமி..

அவரோ மந்தகாசமாக சிரித்தார்.. விவேகானந்தா... உனக்கான வேலை உலகில் பல இருக்கிறதே...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...