751 - பத்மபூஷன் விருது அஜித்

 சரியான நேரத்தில் சரியாக வந்து சேர்ந்து இருக்கிறது இந்த மதிப்பிற்குரிய விருது அஜித் அவர்களுக்கு .

சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் அஜித் 

சினிமாவில் சேர்ந்த சில ஆண்டுகளில் அவரை ஓர் வார பத்திரிகை பேட்டி எடுத்து போதே சொன்னார். எனக்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை அடையணும் அது தான் என்னோட ஆசை லட்சியம் என்று.

பத்திரிகை நடத்துபவர்களுக்கு தங்களின் வியாபாரத்தை சிறப்பாக செய்ய தெரியும் என்பதை அறியாமல் கள்ளமில்லாத மனதுடன் அவர் அன்று சொன்ன வார்த்தைகளை அவருக்கு எதிராக பேச வைத்தது சிலர்.

அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா..ஜம்பது படம் கூட முழுசா முடிக்கலை அதுக்குள்ள இவருக்கு சூப்பர் ஸ்டார் ஆகணும் என்று ஆசையா கேலியும் நய்யாண்டியும் பேசிய சிலர் .

அவர் மீண்டும் மீண்டும் தெளி படுத்தினார். பத்திரிகைகாரங்க பேட்டி எடுக்கும் போது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கேன்.. யாரா இருந்தாலும் தான் இருக்கும் துறையில் இருக்கும் உச்சபட்ச நிலையை அடைய நினைப்பது தவறா.. இங்கே எல்லோருக்கும் சூப்பர் ஸ்டார் கனவு இருக்கு. அதை வெளியே சொல்ல பயப்படுறாங்க 

எனக்கு அந்த பயமில்லை அதனால் தைரியமாக சொல்லுறேன்.. நிச்சயமாக எனக்கு அந்த தகுதி இப்போ வேணா இல்லை என்று சிலர் விமர்சனம் பண்ணலாம் நிச்சயமாக என்னோட தகுதி திறமையை வளர்த்துக் கொண்டு நிச்சயமாக நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்றார்..

பல முறை இவரை தலை கனம் பிடித்தவர் இவருக்கு பேச தெரியாது என விமர்சகர்கள் வந்த போது..சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியே நின்றார்.. தனக்கு பிடித்தமான விமானங்கள் சார்ந்த விஷயத்தை பொழுது போக்காக செய்தார்..

இவரை இழித்தும் பழித்தும் பேசிய அதே மனிதர்கள் அஜித் ஏன் இப்போ படம் பண்ணுறதில்லை என்று யோசிக்க வைத்தார்.. சில ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் எடுத்து வைத்த ஓவ்வொரு அடியும் வெற்றி படிக்கட்டுகளாக மாறிப்போனது.

எந்த பத்திரிகை எல்லாம் அஜித் வாய் துடிக்கானவர் என எழுதியதோ அதே பத்திரிகைகள் அவரின் வீட்டு வாசலில் சென்று அவரை பேட்டி காண துடித்தன.ஆனால் மனிதர் தனது அமைதியும் புன்னகையும் பதிலாக தந்தார்.


இன்றும் கூட விமான நிலையத்திலும் சார் ஓரே ஓர் பேட்டி...என அவரை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து தங்களின் டி.ஆர்.பி எகிற வைக்க முயற்சி செய்யும் பல ஊடக நண்பர்கள்.. சிலர் செய்த தவறுகள் அவரின் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது என்பது தான் யதார்த்தமான உண்மை.


ஓர் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த அனைவருக்கும் இருக்கும் ஆர்வம் ஆசை இவைகளை அன்று அவர் சொன்னதை ஊடகங்கள்  பேசி பிரச்சினையாக்கியது, விளைவு மனிதர் அமைதியாக விலகி நின்று தனது செயல்களால் உலகை திரும்பி பார்க்க வைக்கிறார் 

இன்றோ மாபெரும் வெற்றியை பெற்று விட்டார்..இதை பற்றி பேட்டி எடுக்க பல பத்திரிகைகளில் போட்டி நடைபெறும்.. ஆனாலும் அஜித் எந்த ஓர் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க மாட்டார் என்றே கோடிக்கணக்கான அஜித் அவர்களின் ரசிகர்களில் ஓருவனாக நினைக்கிறேன்.


ஓர் வேளை அவர் தனது மெளனத்தை விடுத்து மீண்டும் பேட்டி கொடுத்தால், அதனால் மிகப்பெரிய சந்தோஷம் அடையும் ஓர் சாதாரண அஜித் ரசிகன் நான்.


ஆமாம் ஓர் வேளை அவர் எதாவது பேசினால் அது கூட மிகவும் தன்னம்பிக்கை தரும் உற்சாகமாக சொற்களாகவே. இருக்கும்.


நிச்சயமாக அதில் அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கவே இருக்காது.. ஆனால் அதை பிற ஊடகங்கள் அரசியலாக ஆக்காமல் இருக்க வேண்டுமே என்ற அச்சமும் இருக்கிறது..


ஏனெனில் அஜித் என்ற பெயரை வைத்து தான் இங்கே பலர் கோலி விளையாட நினைக்கின்றனர் ஆனால் அவரோ யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் தர நினைக்காமல் தான் உண்டு தனது வேலையுண்டு என்றே தனித்த சுதந்திரமான வழியில் வாழும் ஓர் அற்புதமான மனிதர் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...