ஏன்டா மகனே நல்ல நாளும் அதுவா உன் பொண்டாட்டி முகம் வாடின மாதிரி இருக்கா..நீ எதாவது திட்டினீயா
அதை உன் மருமகள்கிட்டையே கேளூ.
என்னம்மா ஆச்சு..நீயாவது சொல்லேன்
அத்தை உங்களுக்கே நல்லா தெரியும்.. இரண்டு நாளா தீபாவளிக்காக தனியா ஆளா.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு..உங்களை கூட நான் உதவிக்கு கூப்பிடல தானே..
ஆமாம்..நீ தனியா எவ்வளவு கஷ்டப்பட்டே அதுக்கு நீ எது கேட்டாலும் வாங்கி தரலாமே..
அதான் அத்தை உங்க மகன் கிட்ட ஓரே ஓர் ஆப்பிள் கேட்டேன் அதுக்கு போய் நல்லா திட்டிவிட்டாரூ..
ஏன்டா.. .மாசம் 30,000 சம்பளம் வாங்குறே.. அவள் ஆசையா ஓர் ஆப்பிள் தானே கேட்டா..வாங்கி கொடுத்தா நீ என்ன குறைச்சா போவே...
யம்மா நீயும் அவள் கூட சேர்ந்துகிட்டு லூசு தனமா பேசாதே.. உன் மருமகள் ஓர் ஆப்பிள்-ன்னு கேட்டது பழம் இல்லை..
பிறகு என்னடா அது..
அட்வான்ஸ் ஆப்பிள் ஐபோன் கேட்குறா அதோட விலையே மூணு லட்சம்.
🤣🤣🤣🤣
கவலை மறந்து சிரிங்க.. சந்தோஷமாக தீபாவளி கொண்டாடுங்க
No comments:
Post a Comment