கத்தி என்னும் ஆயுதம்

 கசாப்பு கடைக்காரர்.. மருத்துவர். கோபக்காரன்.சிறு குழந்தை.விளையாட்டு வீரன்.. இவர் எல்லோரின் கையிலும் சில நேரங்களில் கத்தி என்ற ஆயுதம் இருக்கும். ஆனால் அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது.

இதைப் போலவே தான் சில இடங்களில் சில நேரங்களில் திறமையான மனிதர்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே மதிப்பு மரியாதை கிடைக்கும்.

உன் மண்டையில் களிமண் தான் இருக்கு எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு மண்டையில் எதுவுமே ஏறாது என கேலி செய்து பிறரை மட்டம் தட்டுவது எல்லா இடத்திலும் நடக்கும் ஓர் சாதாரண நிகழ்வு தான்.

ஆனால் ஓர் செயலை தன்னால் இயன்றவரை முயற்சி செய்து சிறப்பாக செய்து முடித்த பிறகும் திட்டுவதும் ஏளனம் பேசுவதும் இங்கே பலரின் இயல்பு.


திறமையான மனிதர்களே சக மனிதரை திறமையானவராக மதிப்பார்கள்.

ஏன்னெனில் அவர்களுக்கு தெரியும் நம்மை போலவே தான் இவரும் ஓர் திறமைசாலி.ஏனோ என் நண்பராக இருப்பதால் காலம் அவரையும் சோதித்து பார்க்கிறது. அவனும் கூட என்னை போல் வெற்றி பெறவே முயல்கிறான் என்பதை உணர்ந்த மனிதர்கள் அவர்கள் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...