இந்த உலகில் பிறந்த ஓவ்வொரு மனிதனும் ஏதோ ஓர் நாளில் அமைதியை தேடுகிறான்.
கஷ்டமே இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை.அந்த கஷ்டத்தை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதை ஆராய்ச்சி செய்து , அந்த மனிதனின் முகத்திற்கு பின்னால் கேலி பேசி சிரிக்கும் உலகமிது..
என் மீது அன்பு செலுத்தியவர் களையும் ஆபத்தான காலத்தில் உதவி செய்தவர்களையும். எந்தவித அடையாளமும் இன்றி, நான் வாழ்ந்த போது என்னையும் சக மனிதராக மதித்து நடத்தியவரின் கண்கள் கலங்கும் முன்னே அவர்களுக்கு உதவ முயல்கிறேன்.
நிலையற்ற உலகில் என்னால் முடிந்த உதவியை செய்யும் சிறு துரும்பு நான்
உலகத்தின் சுபாவத்தை நம்மால் மாற்ற இயலாது.ஆனால் என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியும்.
அதனால் சுற்றி இருப்பவருக்கு ஏதாவது ஓர் நல்லது நடக்கட்டுமே
மனிதன் தான் வாழும் நாளில் எப்படி தனது கஷ்டங்களையும் தாண்டி பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து விட்டு தனது கவலைகளை பிறருக்கு சொல்லாமல் தைரியமாக வாழ்கிறான் என்பதே வாழ்க்கை
No comments:
Post a Comment