ஊடக நண்பர்களே


.
கொரோனா பாதிக்கப்பட்ட மனிதர்களின் அனுபவங்களை பகிருங்கள்...
வீதியில் குடும்ப உறவுகளால் விரட்டப்பட்ட முதியவர், மற்றும் நோய்வாய்ப்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு.... சென்று சேவை செய்யும்....ஏழை நடுத்தர மக்களின் சேவையை பற்றி பதிவு செய்யுங்கள்....
மாபெரும் நடிகர் கொடுக்கும் கோடிகள்... இந்த ஏழைகளின் மறைமுக பணமே....
பல கோடி வைத்திருப்பவர்கள் செய்வது தர்மம் தான்...
ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் பிறருக்கு உதவ வீதியில் வேலையை செய்யும் தன்னலமற்ற மனிதரை பேட்டி காணுங்கள்....
இதில் ஓர் நடைமுறை சிக்கல் இருக்கிறது, அதை நான் நன்கு உணர்வேன்....
தன்னலமற்ற சேவை செய்யும் பலர் தன் முகத்தை ஊடகத்தில் காட்ட விரும்புவதில்லை...
எனவே தான் எழுதுகிறேன், தன் முகத்தை மறைத்து, பலருக்கு உதவி செய்யும் மனிதரை படம் பிடிக்க முயலுங்கள்....
அல்லது முன் களப் பணியாற்றி சிறந்த சேவை வழங்கும் ஊடக நண்பரையாவது பேட்டி கண்டு அவரின் தினசரி நிகழ்வை பதிவு செய்யுங்கள்...

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...