முதல் காதலில்
தோற்று வெறுமையாக
தன்னந்தனியாக
அலையடிக்கும் மெரீனா
கடற்கரையில்
நின்ற போது
தெரிந்து கொண்டேன்
காதலுக்கு மூதலீடு
பொய்களே..ஏனோ
நினைத்து பார்த்தேன்
சென்னைக்கு வந்து
ஐந்து வருடங்களுக்கு
பிறகு காதலில்
விழுந்ததாக சொன்ன
நண்பனின் வரிகளை
நானே நாலைஞ்சு
பேரிடம் சிரித்து சிரித்து
பேசினா தான் ஏதாவது
ஓர் பொண்ணாவது
கிடைக்கும் என்ற
அவனின் பேச்சை..
உலகமே நாடகமேடை
ஷேக்ஸ்பியர் வரிகள்
மனதில் அலையடித்தது
No comments:
Post a Comment