ஷேக்ஸ்பியர் வரிகள் - காதல்

 முதல் காதலில் 

தோற்று வெறுமையாக

தன்னந்தனியாக 

அலையடிக்கும் மெரீனா 

கடற்கரையில் 

நின்ற போது 

தெரிந்து கொண்டேன்

காதலுக்கு மூதலீடு 

பொய்களே..ஏனோ 

நினைத்து பார்த்தேன்

சென்னைக்கு வந்து

ஐந்து வருடங்களுக்கு

பிறகு காதலில்

விழுந்ததாக சொன்ன 

நண்பனின் வரிகளை

நானே நாலைஞ்சு

பேரிடம் சிரித்து சிரித்து

பேசினா தான் ஏதாவது

ஓர் பொண்ணாவது

கிடைக்கும் என்ற

அவனின் பேச்சை..

உலகமே நாடகமேடை

ஷேக்ஸ்பியர் வரிகள்

மனதில் அலையடித்தது


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...