.
அன்பாய் பேசி
குத்தி விளையாடிய
அன்பு நண்பர்...
பலர் அறிய தம்பி என்றே
உரிமையாய் அழைத்தவர்...
உடன் பணியாற்றிய
அலுவலகநண்பர்
அவரின் வேதனை
கதையை என் கதைக்கு கூட
கற்பனை செய்ததில்லை
அவர் பலவருடங்களாக
உயிருக்கு உயிராய்
காதலித்து திருமணம்
செய்த காதல்மனைவி
கொரோனாவின்
கோரமுகத்தை காட்டி
பறித்து சென்ற காலன்...
சில மாதங்களுக்கு முன்
லாக் டவுண் பிரச்சினையில்
வேலையும் இழந்து தவித்தவர்
கல்யாணுத்துக்கு வாங்கிய
கடன் பாதியில் அத்துடன்
தனது சக்திக்கு மீறியே
ஆசைகாதலிக்கு அன்புடன்
பார்த்து பார்த்து கட்டிய வீடு...
குழந்தைகளின் எதிர்காலம்
கண்டு கடல்கடந்து சென்றவர்
தனது கவலைகளை அடுத்தவரின்
முன்னால் சொல்லக்கூட
கூச்சப்படும் மனிதர்.. இன்று
அவருக்கு ஏற்பட்டு இருக்கும்
பொருளாதார மற்றும்
உறவுகளின் இழப்பின்
வலிகளை எப்படி
சமாளிக்க போகிறார்..
நினைக்கும் போது
நெஞ்சில் சஞ்சலத்தின் கடல்
மெளனமாய் பேச மொழியின்றி
தவிக்கிறேன் ஆயினும்
எரிமலையாய் குமறுகிறது
மனம் என்னும் குரங்கு..
இன்றும் கூட சில தகவல்கள்
நண்பனின் கஷ்டத்தை கண்டு
அவரின் நண்பனாய் புரிகிறது
அவர்க்கு ஏற்பட்டு இருக்கும்
மனதின் வலிகள்..
No comments:
Post a Comment