பைத்தியகாரியா...நல்ல காதலியா....


கல்வியில் வென்றவன்

கைநிறைய சம்பளத்திற்காக

வெளிநாடு பறக்கிறான் 

கல்வியில் தோற்றவனோ

தன்னை விட அதிகம்

படித்தவளை காதலிக்க

தொடங்குகிறான்

கல்யாண சந்தையில்

படித்தவளை விட பெரிய

பணக்காரி கிடைத்தால்

என் காதல் பொய்யல்ல

ஆனால் எங்க பெத்தவங்க

சம்மதிக்கலை மென்றே

சால்ஜாப்பு சொல்கிறான்

காதலியோ தன் ஏழை

அப்பனிடம் பணத்தை வாங்கி

அவனுடன் வாழ வரதட்சணை

தருகிறாள்... எதிர்பார்த்த 

பணம் கிடைத்த மகிழ்ச்சியில்

மணமேடை ஏறுகிறான்..

வரவேற்பு நிகழ்ச்சி..

எங்க காதலுக்கு பத்தாவது

வருஷமிது.. ஏனோ பத்தொடு

பதினொன்றாக வந்தவளை

அறிமுகம் செய்தான்.. இவங்க

என்னோட பெஸ்ட் பிரண்ட் என்றே

அவளோ பாலைவனத்து

பறவை போல் சிரித்த படி சொன்னாள் 

நீங்க ரொம்பவே அதிர்ஷ்டசாலி..

அவளின் காதுகளுக்கு

மட்டும் கேட்கும் படி

சொன்னான்.. இனி என்னை

தொந்தரவு பண்ணாதே

காதல் சுத்த பைத்தியக்காரத்தனம்

வரதட்சணை இல்லாம

கல்யாணம் பண்ண

எனக்கென்ன பைத்தியமா

அவளோ வெறுமையாக

சிரித்தாள் பணத்தை விட

பெரிய பாசத்தை தேடும் 

இவ பைத்தியகாரியா....

நல்ல காதலியா....

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...