தயவுசெய்து எனக்காக நீ நூல்டுல்ஸ் கூட செஞ்சு தர வேண்டாம்..
ஓரே ஒரு நாள் எனக்காக நாம அன்னிக்கு ஊருக்கு போகும் போது சாப்பிட்டோமே வட்டமா பெருசு இருந்துச்சே அதே மாதிரி செஞ்சு தாயேன்..
நீ அதே மாதிரி செஞ்சு தந்தாலே போதும்..
நீ தினமும் மூணு வேளையும் கூட அதையும் தா..
நான் அடம் பிடிக்காம சமத்தா சாப்பிடுவேன்..காலை வேளையில்
சமையலறையில் நின்று கொண்டிருந்வளிடம் வந்து கேட்டான் ரஞ்சித்
பாரூடா இந்த பொடுசு கூட தான் நினைச்ச மாதிரி சாப்பிட ஆசைபடுது நீயும் தான் இருக்கீயே.
பேசாம இந்த சனியனை தலைமுழுகு. போன வாரம் வந்துட்டு போனானே உன் வக்கீல் பிரென்ட் அவன் கிட்ட பேசி சுமூகமாக இவளை அவங்க அப்பன் வீட்டுக்கே அனுப்பி வைச்சுடு.மாசத்துல பத்து நாள் இல்ல பொழுதெல்லாம் அவ அங்கேயே இருக்கட்டும்.
அம்மா நீ வேற பேசி பிரச்சினையை இழுக்காதே என்ற கோபால்
நான் சொல்லுறதுல என்னடா தப்பு இருக்கு..
இவ வீட்டுக்கு வந்த நாளில் இருந்தே ஓரே கண்றாவி தான்.
உன்னை விட அதிகம் படிச்சு இருக்கோம்கிற திமிரூ..
உனக்கு தான் அறிவே இல்லையே.
அந்த விஜயா உன்னை எப்படி எல்லாம் சுத்தி சுத்தி வந்தா அவளை கட்டி இருந்தா வரதட்சணை இன்னும் அதிகமாவே கிடைச்சு இருக்கும் நம்ம பட்ட கடனை எல்லாம் அடைச்சுட்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்..
என்னம்மா இப்படி பேசுற.அவளை கட்டிகிட்டா பணக்கார வீட்டில்ல நாய் மாதிரி தான் இருக்க வேண்டி வரும்..
உனக்கு இந்த பொண்ணு தான் சரியா இருப்பா..நீ ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் நம்ம வீட்டு சத்தம் வெளியே தெரியாம போட்டதை தின்னுகிட்டு வீட்டுக்குள்ளேயே கிடப்பா.
அதையும் மீறி ஏதாவது உன்கிட்ட பிரச்சினை பண்ணிணா.. இரண்டு வார்த்தை அன்பா பேசி அவளை அவங்க ஆத்தா வீட்டுக்கு போகாம நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு எல்லாம் சொன்னே..
ஆமா சொன்னே அதுக்கு இப்போ என்னவாம்.. இந்த பிச்சைக்கார நாயீ என்னையவே எதிர்த்து பேசுது..
என்னை எதிர்த்து பேசுற உனக்கு எதுக்குடி என்னோட இருந்து பவுன் செயின் அதை என்கிட்டயே கொடுன்னு சொன்னதுக்கு.. அதையெல்லாம் தர முடியாது..
நான் உங்க வீட்டுக்கு வந்தபோது ஆசையா நீங்க போட்டதுன்னு எதிர்த்து பேசுறா...
நீ தானேம்மா அந்த செயினை அவகிட்ட கொடுத்தே..
இவன் எவன்டா விபரம் தெரியாதவனா இருக்கான்..
அவ அப்பன் நம்மள விட பணக்காரன் ஆனா தன் புள்ளைகளை ஏழை மனநிலையில் வளர்த்து இருந்தான்..நீ கூட அடிக்கடி சொல்லுவீயே அவளுக்கு கழுத்துல பத்து பவுன் நகை போடும் என்பது தான் லட்சியம்.. அந்த ஓரே ஒரு விஷயத்தை வைச்சு தான் அவ என்னை நாய்க்குட்டி மாதிரி சுத்தி வர வைச்சேன்னு..
மெதுவா பேசு அவ காதுல ஏதாவது விழுந்திட போகுது..
நல்லா விழட்டுமே..
இதை கேட்ட அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா..
அது கூட நமக்கு நல்லது தானேடா..அதையே காரணமாக சொல்லி டைவர்ஸ் வாங்கிடு.. அந்த புள்ளையும் ஆத்தா போலவே தான் இருக்கும்
பெத்த கடனுக்கு கடைசி வரை இவ அவங்க அப்பன் ஆத்தாவுக்கு வடிச்சு கொட்டுகிட்டு பிள்ளையார் கோயில்லை தூத்து பெருக்கிட்டு வாழ்க்கையை முடிச்சுட்டு போகட்டும்..
நீ அந்த விஜயாவ இரண்டாம்தாரமா கட்டிக்க.. அவங்க அப்ப…
ஓரு வருஷமா இந்த கதை நடந்துக்கிட்டு இருக்கு.. நானும் உனக்காக ஓவ்வொரு வாரமும் அவ வீட்டுக்கு கதையெல்லாம் தெரிஞ்சு கிட்ட இருந்தேன்.
அவனின் முகத்தில் ஆசை வெளிபட்டது.
எப்படியோ பெரிய பணக்கார பெண் அது நிறைய சொத்தோடு...
வேலைக்கே போகாதவனுக்கு இரண்டாவது முறையாகவும் அதிர்ஷ்டம் கதவை தட்டுவது போல் இருந்தது..
வாசலில் நன்கு படித்த பெண் பெற்ற அந்த முதியவர் வந்து நின்றார்.
அப்போது இருந்த நாற்காலியை விட்டு எழுவும் மனமின்றி சத்தமாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கேட்க வேண்டும் என்றே ராக்காயி
என்ன விடிஞ்சு விடியாம வாசல்ல கடன்காரன் மாதிரி வந்து நின்னுகிட்டு எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்கும் அறிவில்ல நீங்க பெத்து போட்ட இந்த.. வார்த்தை மிகவும் கேவலமாக வந்து விழுந்தது..
அது வந்து சம்பந்தி அம்மா நேத்து என் பொண்டாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா..
நான் மதியம் கடையில் இருந்து …
அடுத்த வீட்டில் சண்டை நடந்தால் தனது வேலையை கூட விட்டு விட்டு வந்து வேடிக்கை பார்த்து ரசிக்கும் கூட்டம் வீட்டு வாசலில் கூடி நின்றது..
அதில் சிலர் வழக்கம் போல் நல்லவிதமாக பேசுவது போல இருவரும் இடையே கொம்பு சீவி விட்ட ஆயத்தமாயினர்..
மற்ற நாளில் அமைதியாக இருக்கும் அவள்.. காலையில் விஜயா கதையை கேட்டதில் இருந்து ஓர் முடிவு எடுத்திருந்தாள்..
இடையே சமரசம் பேச வந்தவளை.இங்க பாருங்க எங்க வீட்டு விஷயத்துல தலையிட நீங்க யாரூ தன் கோபத்தை அவர்களிடம் காட்டினாள்..
அப்போ நீ உங்க அப்பா வீட்டுக்கு போகத்தான் போறீயா மாமியார் கரிசனத்துடன் கேட்பது போல் இருந்தது.
ஆமா அவங்களுக்கு ஆம்பள புள்ள இல்லை.. காதலிக்கும் போது அவங்களையும் நல்லா பார்த்துப்பேன்னு தான் உங்க மகன் சொன்னாரூ ஆனா..
ஏன்டீ பழைய கதையை பேசி என்னை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுறே..
அவளோ விக்கித்து போனாள் காதலித்தது குற்ற உணர்வா.. அல்லது கல்யாணம் செய்து கொண்டது குற்ற உணர்வா...
முடிவு எடுக்க முடியாமல் அவள் தவித்து கொண்டிருந்த போது ஓர் பத்திரத்தை பீரோவில் இருந்து எடுத்து வந்த பேப்பரை டீப்பாய் மீது வைத்தாள் அந்த வீட்டின் பெரிய மனுஷி..
நீ போறதை பத்தி எங்களு…
என்னம்மா நடக்குது இங்கே படிப்பறிவு அதிகமில்லாத அந்த ஏழை முதியவர் படபடப்புடன் பயம் கலந்த தொனியில் கேட்டார்.
விடுதலை பத்திரம் இனி நானும் என் பையனும் இந்த வீட்டுக்கு வர வேண்டியதே இல்லை.
வாசலில் கூட்டம் கூடி இருக்கிறது நம்ம கெளரவம் என்னவாகும் என்பதையெல்லாம் சிந்திக்க கூட நேமில்லாம நெடுச்சாண்கிடையாக அந்த பெரிய மனுஷி காலையில் விழுந்தார்..
சம்பந்தியம்மா நான் ஏதாவது தப்பா பண்ணி இருந்தா என்னை வேணாலும் நடுவீதியில் வைச்சு செருப்பை கழட்டி அடிங்க வாங்கிக்கிறேன்..
என் பொண்ணோட வாழ்க்கை இது..
ச்சீ தூரப் போ அசிங்கம் பிடிச்ச குடும்பம்..அவ எப்படி போனா எனக்கென்ன என் பையனுக்கு இன்னொரு கல்யாணம் கூட பண்ணி வைப்பேன் தெரியுமா ஏகதாளமாக பேசினாள்
நீங்க பெரிய மனுஷங்க என்னவெனாலும் பண்ணுங்க..
என் பொண்ணு கடைசி வரை உங்க வீட்டுல பத்து பாத்திரம் கழுவுற ஓர் வேலைகாரியா கூட இருந்திட்டு போகட்டும…
பரிமளா அப்பாவின் கையை வ
பிடித்தாள்..அப்பா இனிமே நான் தான் உங்களுக்கு மகன் வாங்க போகலாம் என்றாள்.
அம்மா எனக்கு நீ அந்த சாப்பாடு செஞ்சு தருவீயா ஏக்கத்தோடு கேட்டான் ரஞ்சித்..
ம்ம் செஞ்சு தாரேன்..
நீ உன்னோட பொருளை எல்லாம் எடுத்து வைச்சுக்கோ பரிமளா சொன்னவுடன்
அப்பாவியான முகத்துடன் கேட்டான்.இந்த வீட்டில எனக்கு நீ தானே எல்லாமும்.
ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்ச ஓரே ஒரு பொருள் இருக்கு அதை எடுத்துகிட்டு வரலாமா.. அம்மாவின் முன்னால் குழந்தை குழந்தையாகவே இருந்தது..
சரிடா எடுத்துகிட்டு வா..அவள் சொன்ன மறுநிமிடம் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றவன்... ஓர் வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் ஓர் நாய்க்குட்டியை தூக்கி கொண்டு வந்தான்..
ரஞ்சித் இது என்னடா புதுசா இருக்கு தாத்தா அப்போது தான் வாயை திறந்தார்..
தாத்தா இது ரொம்ப பாவம் தெரியுமா.நேத்து ஓர் லாரி மாதிரி வேன்ல வந்தவங்க இதோ…
ரஞ்சித் பேசிய வார்த்தைகள் தனக்காகவே பேசியதை போல் பரிமளா உணர்ந்தாள்..
அந்த மூவரும் கிளம்பி செல்வதை கூட பார்க்க நினையாமல் திரும்பிக் கொண்டனர்..
காலங்கள் உருண்டோடியது..
பிறரின் வாழ்வில் பிரச்சினையை உண்டு பண்ணி தன்னை
நல்லவள் போல் காட்டிக்கொள்ளும்
பார்வதி வீடு தேடி வந்து பழைய கதைகளை பேசி அவளை உணர்ச்சிவசப்பபட வைக்க நினைத்தாள்..
No comments:
Post a Comment