மதிப்பு தெரியவில்லை..
.
.
தவறுகளை
ஒத்து கொண்டு
பலருக்கு மனதில்லை..
போலியான கெளரவம்
தலையில் தலைகனமாக
மாறிப்போனது.. உலகில்
தவறே செய்யாத
மனிதன் எவனுமே இல்லை...
சிலர் தனது தவறுகளை
கச்சிதமாக மறைத்து விட்டனர்....
சிலர் செய்யாத தவறுகளுக்கு
விதியின் பெயரால் ......
உலகம் விசித்திரமானது...ஏனோ
தவறுகளை கச்சிதமாக
செய்து தப்பிக்கும் போலிகள்..
உண்மையை தேடும் மனிதனை
கைநீட்டி கேட்கிறான் ...
கேள்விகள் ஆயிரம்...
போலியாக வாழ பழகாதவன்...
மெளனமாய் நகரந்தே போனான்...
சில வருடங்களுக்கு பிறகே
புரிந்ததது வாழ்க்கை...
இயற்கையின் விளையாட்டு
எப்போதும் கச்சிதமாய்
நகர்கிறது...இன்றோ
உண்மை தேடியவன்
மனதில் ஆயிரம் ஆயிரம்
சந்தோஷங்கள்.... அந்த
போலி பித்தலாட்டகாரன்.
இப்போது நடிக்கிறான்...
மனதின் ரணங்களை
மறைத்து விட்டு...
போலியாய் பகட்டுடன்...
நிம்மதியான மனிதவாழ்வின்
மதிப்பு தெரியவில்லை... அவனுக்கு
No comments:
Post a Comment