ஆறுதல் மொழி

பக்கத்தில் இருந்த கைகளை பிடித்து அவனின் கண்களை நோக்கி நான் உன் கவலைகளை அறிவேன்.

என்னால் இயன்றவரை உனக்கு முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று பேச வேண்டிய அவசியமில்லை.

அவனின் தோள்களில் சாய்ந்து மனதின் கவலைகளை சொல்லணும் அப்படி சொன்னாலாவது  அவனுக்கு நான் படும் கஷ்டமும் வேதனையும் புரியும் என்பதும் கூட அவசியமில்லை 

ஓர் வேளை நாம் கஷ்டப்படுவது தெரிந்தால்  அவன் எப்படியெல்லாம் ஆறுதல் சொல்வான் என்று நினைத்தாலே போதும்.. அன்று ஓர் நாள் அப்படித்தான் தனியாக இருந்த போது எல்லோரும் பாடாய் படுத்தி வேலை வாங்கினர்.

மறுநாள் அவனிடம் மன்னிப்பு கேட்ட போது சிரித்த படி சொன்னான். 

அவன் சொன்ன வார்த்தைகளில் தான் எத்தனை வலிகளை தாங்கிய தத்துவங்கள்

அவனை போன்ற ஓர் வெள்ளந்தியான மனிதனை காண்பது அரிது 

கவலைபடும் நேரத்தில் கூட தன்னம்பிக்கையாக பேசி மனதின் கவலையை மாற்றும் அவன் ஓர் சிறந்த நண்பன் மட்டுமல்ல.

பிறரை விமர்சனம் கூட செய்ய விரும்பாமல் தன் வேலையை மட்டுமே செய்ய விரும்பும் ஓர் நல்லவன்

அவனின் ஆறுதல் வார்த்தைகளை நினைத்து பார்ப்பது உண்டு. 


ஆறுதல் சொல்வதற்கு கூட ஓர் நல்ல மனம் இருந்தால் தான் சொல்லுவாங்க.

இன்றைய கஷ்டமான தருணத்தில் அவன் என்னருகில் இருந்தால் எந்த விதமாக ஆறுதல் வார்த்தைகளை பேசி இருப்பான் என்று நினைத்தாலே பாதி கவலைகள் பறந்து விடும்.


ஏன்னா அவனை போல் தன்னம்பிக்கையாக பேசும் இன்னொரு மனிதனை நான் பார்த்ததில்லை 

என்றோ அவன்  பேசிய ஓவ்வொரு வார்த்தையும் இன்றும் கூட தன்னம்பிக்கை தரும் ஆறுதல் மொழியே

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...