நேற்று வரை
தேவைபட்ட
பொருள் - தேவை
முடிந்த காரணமாகவோ..
அல்லது தேவைகள்
சலித்து போனதாலோ.
இன்று அதற்கு அவர்கள்
தந்த பெயர் உதவாத குப்பை
வேண்டாத குப்பை
தூக்கி வீசிய அந்த
குப்பை கழிவுகளை பதப்படுத்தினான்..
அந்த நல்ல மனிதன்
ஏனென்றால் அவனுக்கு
நன்றாகவே தெரியும்
நல்லவர்களை தேவை
முடிந்த பிறகு தூக்கி
வீசுவது உலகியல்
இயல்பு தானே. எனவேதான்
இன்று அதை பயனுள்ள
உரமாக மாறி
விவசாயத்தை
செழிக்க வைக்கின்றான்
பலருக்கு உதவி செய்யும்
இந்த விவசாயி
No comments:
Post a Comment