தொண்டர்களை மறந்து
கரண்சியை எண்ணிய
கட்சி தலைவர் அவர்..
கரண்சியின் கரெண்ட்
வந்த மயக்கத்தில்
தொண்டர்களை புறந்தள்ளினார்.
கரண்சியும் கட்சியும்
கரைந்த பின்னர்
( மன்னிக்கவும் மேலே இருப்பவன்
கரைக்க வைத்த பின்னர்)
கரைந்து போன கரண்சி வந்த
வழியை சொல்ல
வருமானவரித்துறை வாசலில்
நிற்கிறார்.. சார்..டீ... சார் டீ...
என்பவன் கூட முறைத்து செல்கின்றான்...
முன்னாள் தலைவர்.. பணமின்றி
அவர் படும் அவஸ்தையை ...
கரைந்தது கரண்சி மட்டுமல்ல...
ஆறுபது ஆண்டுகளாக
ஆண்ட கட்சியும் தான்..
No comments:
Post a Comment