ஓர் நாள் எதிர்பாராத விதமாக அரசு ஆஸ்பத்திரியில் விபத்து காரணமாக அட்மிட் செய்யப்பட்ட ஓர் நண்பரை பார்க்க வேண்டி சென்றேன்.
அதற்கு முன்னர் கூட பல முறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தாலும்...
அன்று தான் முதன் முறையாக அவசர சிகிச்சை பிரிவில் சென்று ஓருவரை கண்டேன்.
அப்போது அவரை விடவும் மிகவும் அதிகமாக பாதிக்கபட்ட பலரை கண்டேன்.
சற்று நேரத்திற்கு முன்பே ஓர் சாதி பெயரை புகழ்ந்த படி ஓர் கூட்டம் தெருவை அடைத்து கொண்டு சென்றது.
அதனால் சில நிமிடங்கள் அல்ல பல நிமிடங்கள் தாமதமானது.. அந்த கூட்டத்தில் ஓர் ஆம்புலன்ஸ் வேறு மாட்டிக் கொண்டு விழித்தது.
கவலைபடாதீங்கம்மா நாம பின் வாசல் வழியாக கொண்டு போயிடுவேன்.. ஐயாவுக்கு ஓண்ணும் ஆகாது நம்ம டாக்டர் எல்லாம் சூப்பர்.. எப்படியும் காப்பாத்திடுவாங்க.டிரைவர் ஏதோ சமாதானம் சொன்னாலும் அருகில் இருந்தவர்களின் முகத்தில் இருந்த பதட்டம் என்னை என்னவோ செய்து சாதிகளை வெறுக்க செய்தது
Contd...
No comments:
Post a Comment