காசு சேர்ப்பதில் தோற்றவன்
காதலை தேடுகிறான்.
காதலில் தோற்றவன்
கடவுளை தேடுகிறான்.
கடவுளில் தோற்றவன்
ஆடம்பர பொருட்களை
தேடுகிறான்.
ஆடம்பர பொருட்களை தேடுபவன்
அமைதியை தேடுகிறான்.
அமைதியை நாடுபவன்..
அந்த அமைதியை அடைய
மீண்டும் காசை தேடுகிறான்...
மீண்டும் மீண்டும் இந்த சக்கரம்
சுழன்று கொண்டே தான் இருக்கிறது..
ஓவ்வொரு முறை தோற்கும் போது
இன்னொரு விஷயத்தில் வெல்வதாக
நினைத்தே ஓடுகிறான்...
ஓடி முடிந்து உறங்கும் போதே
உணர்வு வருகிறது.. இந்த
மாயா உலகில் வெற்றியை
அடைந்த எல்லோருமே யார் ஓர்
மனிதனால் ஏமாந்தவர்கள் தான்
No comments:
Post a Comment