இப்போ நான் சொல்லுறதை கேட்க போறீயா இல்லையா...
கோபத்துடன் அம்மா பேசும் பேச்சிற்கும் தனக்கும் எதுவுமே சம்பந்தம் இல்லை என்பது போல டி.வியில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் ..ஹேமா...
ஏண்டி உன்னை தானே கேட்குறேன்...
காது கேட்குதா இல்லையா....
நான் என்ன உங்க அப்பன் மாதிரி செவிடு போல நடிக்கிறவ இல்லை....
இந்த வார்த்தையை கேட்டவுடன் அவளுக்கு மேலும் கோபம் தலைக்கு ஏறியது.... அருகே இருந்த தண்ணீர் டம்ளரை அவளை நோக்கி வீசினாள்.....
கையில் இருந்த துண்டால் சச்சின் சிக்ஸர் அடிப்பது போல துண்டை சூழற்றினாள்....
ஆனால் ஏனோ ஓப்பனிங் பேட்ஸ்மேன் போல டம்ளரை தடுக்க முடியவில்லை...அது வசமாக அவளின் காலில் பட்டது....
வரவர உனக்கு கொழுப்பு ஜாஸ்தியா போச்சு.... பெத்த பிள்ளே மேலேயே வீசுறீயே...
3 வயது குழந்தைக்கு தன் பேசும் பேச்சில் உள்ள தவறு தெரியாமல்.. தன் அம்மாவிடம் சொல்லி காட்டிய வார்த்தை அனைத்தும் மாமியார் மருமகள் பேசிய பேச்சுக்கள்...
ஹேமா கோபத்தில் மேலும் கத்தினாள்... ஏண்டி எல்லாம் உங்க அப்பா கொடுக்குற செல்லம்..நீ இதுவும் பேசுவே.. இதுக்கு மேலேயும் பேசுவே......
அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு ஆபிஸ் முடிந்து வந்த களைப்பில் சோஃபாவில் அமர்ந்தான்....
அப்பா ஓடிப்போய் அவனின் முதுகில் சாய்ந்தாள்.... இன்னிக்கு எனக்கு என்ன ஸ்பெஷல் என்ற வைஷ்ணவியிடம்....
நீதான் செல்லும் ஸ்பெஷல் அன்று கன்னத்தில் முத்தமிட்டான்....உடனே தன் தாயை நோக்கி கைகளை நீட்டி உனக்கு தைரியம் இருந்தா..இதே மாதிரி செய் பார்ப்போம்..
டி.வியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா நமட்டு சிரிப்பு சிரித்தார்...
கவனிச்சியா..உமா...நீ பேசுற வசனத்தை ஓண்ணு விடாம மனப்பாடம் பண்ணி வைச்சுக்கிட்டு..உன்னை மாதிரியே அவள் கிட்ட சண்டை போடுறா பாரு....என்ன குழந்தைக்குஇ எதை எப்போ பேசணும்னு தெரியலை ஆனா உன்னை போல ...
நீங்க சும்மா இருங்க மாட்டீங்க போலையே.. நாங்க சண்டை போட்டு மூணு நாள் ஆச்சு....
No comments:
Post a Comment