நான் ஆதரிக்கிறேன்

 நான் ஆதரிக்கிறேன்.

( அரசு கொண்டு வரும் சட்டத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும், கருத்துக்களை சொல்லுவதும் ஜனநாயகத்தின் உரிமை.உங்களுக்கு என் கருத்தில் மாறுபாடு இருந்தால் சொல்லுங்கள்.)

எந்த ஜாதியில் பிறந்தார் என்பது முக்கியம் அல்ல...

மனதூய்மையும், மன அமைதியும் தேடுவோரும்....

மக்கள் சேவையே மகேசன் சேவையாய் நினைப்போர் அனைவரும் கோவில் அர்ச்சகர் பணி செய்யலாம் பெண்களுக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பெண்களும் வழிபாடு செய்ய வழி வகுத்த மேல்மருவத்தூர்  கோவில்....

பெண்கள் கோவிலில் பூஜை செய்ய கூடாது என்ற விதி எங்கே உள்ளது....

மயிலை கற்பகாம்பாள் சிவபூஜை செய்தார்...

சீதா தேவி தன் கைகளால் செய்த மணல் லிங்கமே இராமேஸ்வரம் கோவில் கற்பக்கிரகத்தில் உள்ளது...

சிவன் அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையார் ஓர் பெண் என்பதை மறக்க வேண்டாம்...

வீட்டில் விளக்கேற்ற மருமகள் வர வேண்டும், அப்போ தான் வீடு செழிக்கும் என்பதே பேச்சு வழக்கு...

பெண்களுக்கு போலீஸ் வேலை சரிவராத என்று முதலில் எதிர்ப்பு வந்தது....

இப்போது அந்த துறையில் அவர்கள் சாதித்து ராணுவத்தில் இடம் பெற்றனர்....

பெண் பூஜை செய்வது பாவம் என்பவர்களே... நம்மை பத்து மாதம் கருவறையில் சுமந்தவள்...

நிச்சயமாக சிறந்தவளே....

சாக்த வழிபாட்டில் எல்லா பெண்களையும் பராசக்தியின் வடிவாக கண்டவர் எழுதியதே அபிராமி அந்தாதி


By ...

Raman Sankar

https://dhenaliraman.blogspot.com

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...