தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடுங் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே.
மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடைசெய்யுங்கள்; கோபத்தை அறவே விட்டுவிடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்; இருந்தபடியே அசைவற்றுப் பேசாமல் இருங்கள். இவ்வாறு செய்வீர்களானால் ஏழு உலகங்களும் பிழைக்குமாறு கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து துகள்பட்டு அழியும்படி கூர்மையான வேலினை விடுத்து அருளிய தனிப் பெருந்தலைவராகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும்.
No comments:
Post a Comment