கிராமங்களில் மிகப்பெரிய சொத்து என்பது கோவில்களே.
கோவிலில் இறைவனின் பெயரால் மாதம் ஓர் முறை அபிஷேகம் ஆராதனை நிகழ்கிறது.
ஓர் கிராமத்தில் சிவன் கோவில் இருப்பதால் மாதமிருமுறை பிரதோஷம் நடைபெறுகிறது.
அப்போது நந்திக்கு அபிஷேக பொருட்கள் என்று அரிசிமாவு, மஞ்சள், திரவிய பொடிகளும் மற்றும் மலர் மாலைகளும் சூடம் பத்தி என்ற பொருட்களும் வியாபாரம் செய்யப்படுகிறது.
பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத விஷேச நிகழ்கிறது.
இது தவிர வெளியூர் மக்கள் அந்த ஊருக்கு வந்து செல்வதால் பொருளாதார சூழ்ச்சி நடைபெறுகிறது.
அதாவது பணத்தை செலவழிப்பதால் உண்டாகும் சூழற்சி.
பகுத்தறிவு என்னும் பெயரால் கோவில் மீது ஏனோ வெறுப்பு உண்டியல் உணர்வைமீது சிலர் ஏற்படுத்த முயன்றனர்.ஆயினும் பல கோவில்கள் கட்டப்பட்டன.இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்து மதத்தின் ஓவ்வொரு நிகழ்வும் அறிவியலோடு சேர்ந்த ஆன்மீகம். சாதாரண மக்களிடம் பிள்ளையாருக்கு உக்கி போட்டால் நல்லது தருவார் என்று தான் பொதுவாக சொல்ல முடியும்.
இப்படி செய்வதால் உங்களின் மூளை நரம்புகள் வலுப்பெறும், மூளை சார்ந்த நோய் வராது, தேவையற்ற படபடப்பு குறையும் என்று எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.
ஏனென்றால் இந்து மதத்தின் ஓவ்வொரு நடைமுறைக்கு பின்னாலும் பல அறிவியல் மூடிச்சுக்கள் உண்டு.
அரசமர காற்றும் வாழையின் பலனும் வார்த்தைகளில் சொல்வதானால் பலருக்கும் எரிச்சல் தான் வரும்.
எனவே தான் வெள்ளி கிழமை துர்க்கை, சனிக்கிழமை ஈஸ்வரன், செவ்வாய் கிழமை முருகன், சதுர்த்தி விநாயகர் என்று வகுத்து வைத்தனர்.
வருடத்திற்கு ஓர் முறை தேர் திருவிழா என்ற பெயரிலும் மாபெரும் விழா கோலம் கண்டு ஊரில் வியாபாரம் செழிக்கிறது...
கோவிலுக்கு
No comments:
Post a Comment