பாசக்கயிறு...
.
.
அரசு இயல்
துறந்த அன்று
கிடைத்த பெயர்
புத்தர்....இன்றோ
இமயமலையின்
சாரலையும் பனிகளையும்
ரசிக்க முடியாமல்
பணிசுமை கொடுத்து
கூண்டில் அடைக்க நினைக்கும்
முதன்முறையாக
பார்வையில் படும்
யார் யாரோ புதிய மனிதர்கள்...
உடன் இருப்பவர்களையும்
சகிக்க முடியாமல்
தவிக்கும் தவிப்பில்
மீண்டும் சென்று
விட துடிக்கிறேன்
அந்த கங்கைகரை
நதியோரம் அமைதியான
ஆள்அரவரமற்ற
ஏகாந்தம் தேடி...
பதவியும் பட்டமும்
சுகமல்ல...
தலைவனாக என்று
சொல்லி என்னை நெறிக்க
துடிக்கின்ற
பாசக்கயிறு...
ஆனந்தம் ஆன்மீகம்...
அரசியல் ஆர்பாட்டம்...
No comments:
Post a Comment