வேண்டாம் என்றே
விலகி ஓடுபவனை
பிடித்து மேடையில்
அமர வைத்து
தலையில் கிரீடம்
சூட்டி மகிழ்ந்துவிட
உங்களுக்கு ஏன் இந்த
அவசரம்... மலர் மாலை
வேண்டி வரிசையில்
பல பேர்.... காத்திருக்க....
என்னை மேடைக்கு
அழைப்பது ஏன்...
நீங்கள் காட்டும்
பாதையை விட...
நான் நடைபழகிய
பாதை போதும்...
அதில் முட்களும் இல்லை...
மலர்களும் இல்லை.. ஆனால்
அதில் தான் எத்தனை எத்தனையோ
ஆனந்தம்... செயற்கை வேண்டாம்...
இயற்கை போதும் அதுவே என்
உன்னத மகிழ்ச்சி
No comments:
Post a Comment