உன்னத மகிழ்ச்சி

வேண்டாம் என்றே

விலகி ஓடுபவனை

பிடித்து மேடையில்

அமர வைத்து

தலையில் கிரீடம்

சூட்டி மகிழ்ந்துவிட 

உங்களுக்கு ஏன் இந்த

அவசரம்... மலர் மாலை

வேண்டி வரிசையில்

பல பேர்.... காத்திருக்க....

என்னை மேடைக்கு

அழைப்பது ஏன்...

நீங்கள் காட்டும்

பாதையை விட...

நான் நடைபழகிய

பாதை போதும்...

அதில் முட்களும் இல்லை...

மலர்களும் இல்லை.. ஆனால்

அதில் தான் எத்தனை எத்தனையோ

ஆனந்தம்... செயற்கை வேண்டாம்...

இயற்கை போதும் அதுவே என்

உன்னத மகிழ்ச்சி


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...