எத்தனை ஆண்டுகள்
ஆனாலென்ன
எத்தனை ஆட்சியாளர்கள்
மாறினால் தான் என்னவாம்
எத்தனை முறை பல மேடைகளில்
திராவிடமென்றே தீப்பொறி
பறக்கும் வண்ணம் பிறரை
உணர்ச்சிவசப்படுத்தினாலும்...
திராவிடம் என்பது ஒரு கட்டுக்கதை
தமிழும் தமிழ் மொழி ஆர்வலர்களும்
அமைதியாக வேண்டுகிறது
ஏனெனில் தமிழ் மொழியை
எப்படி பாதுகாக்க வேண்டுமென்பதும்
எப்படி எங்கே தமிழை
வளரச்செய்ய வேண்டுமென்றும்
தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்
யாதும் ஊரே யார் கேளீர்
தரணியெங்கும் தரணியாளும்
தமிழ் மொழியே முதல் மொழி...
No comments:
Post a Comment