ஒவ்வொரு
வருடமும்
புத்தனும்
ஏசுவும் பிறப்பதில்லை
அதனால்தானோ
என்னவோ
அன்பெனும்
விதையினை
ஒரு பெண்ணால்
மட்டுமே ஊன்ற முடியும்மென
பெண்ணினை படைத்தான்
ஆயிரம் தோல்விகள்
கண்டவனும்
உயிர்வாழ்வதும்
போராடுவதும்
அன்பென்னும்
துணையவள்
வரவுநோக்கியே
அனாதைகளாய்
கிடந்தவர்களுக்கு
மட்டும் தான்
அன்பின் வலிமை
புரியும் ஏனென்றால்
அன்பெனும்
கதிரவனை நினைத்து
காத்திருக்கும்
சூரியகாந்தி அவர்கள்
No comments:
Post a Comment