உட்கட்சி பூசல்


மாபெரும் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலை பூசி மொழுகின்றனர்...கட்சியை விட்டே விலகி போக நினைத்து விலகி நின்றவரை அழைத்து மாலை மரியாதை செய்கின்றனர்.
ஏனோ அவர்களும் கூட ஒப்புக்கு சிரித்து...சித்தனையின்றி சிதறி விட்டு செல்கின்றனர் மேடையில் சில வார்த்தைகளை.... முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அதீத கற்பனையில் கனவு கண்டவர் கூட கட்சியில் பல வருடங்களாக இருப்பவனுக்கு அறிவரை என்ற பெயரில் பேசுவதை கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது.. அடுத்த மாதம் தானே தேர்தல்... இரண்டு நாளைக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்சா சரியாக இருக்கும் தேர்தலில் போட்டியிட..அப்படியே சி.எம் ஆயிடலாம் என்றே பகல் கனவு கண்ட சிலர்.. இன்றும் கூட கட்சிக்கு உதவுவது போல் இருக்கும் பலரால் கட்சியின் கோட்பாடுகள் சிதைந்து கொண்டு இருக்கிறது..உங்களை இந்த பதவிக்கு வரவிடாமல் செய்வதற்கு பிரயத்தனங்கள் செய்தவரே உங்களுக்கு அருகில் அமர்ந்து பல ஆண்டுகளாக விசுவாசமாக இருக்கும் உண்மை தொண்டனுக்கு குட்டி கதையில் பாடம் நடத்துகிறார்.. ஓர் வேளை அவர் கட்சி ஆரம்பித்திருந்தால என்னவாக இருந்திருக்கும் நினைக்கும் போதே உள்ளூர சிரிப்பு வருகிறது.. அந்த
தன்னையும் தனது பணத்தையும் பாதுகாத்து கொள்ள நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது மட்டும் வந்து ஓட்டிக் கொள்ளும் கூட்டத்தை நம்பும் தலைவரும் அவரோடு சேர்ந்து ஜால்ரா தட்டும் சிலரும்
அதிக கூட்டத்தில் அனைவருமே நன்றாக நடித்த படி சிரிக்கும் போது.மனசாட்சியை அடக்கமுடியாத உண்மை தொண்டன்.பக்கத்தில் இருப்பவரிடம் சொல்கிறான்.... அடுத்த மாசம் வரைக்கும் இவனுங்க கட்சியில் இருந்தாலே அதிசயம் தான்...ஏனோ தலைவரின் காதுகளில் விழ இயலாத வகையில் முழங்கிறது மேளதாளம் மேடையில்.... உண்மை தொண்டன் வலியில் துடிக்கிறான்.... உண்மை தொண்டனை போல் நடிப்பவனை நம்பினால் கட்சி கரையான் புற்று மழையில் கரைவது போல் கரைந்து போகும் என்பதை கூட கேட்கவும் நினைக்காத சில தலைவர்களால்... தொண்டர்கள் விலகி செல்கின்றனர் கட்சியை விட்டே.... இப்படிக்கு கட்சியின் அனுதாபியாக இருந்து விமர்சகனாக மாறிப்போன பல தொண்டர்களில் யாரோ ஒருவன் மனசாட்சியை அடமானம் வைக்க இயலவில்லையே

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...