தயவுசெய்து அமைச்சர் பெருமக்களே..
பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்பதை பேசும் நீங்கள் ஏன் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை பற்றி பள்ளியில் பேசுறீங்க.
தமிழக அரசின் முத்திரையை நன்றாக பாருங்க அதில் கோவில் கோபுரம் இலச்சினையாக உள்ளது.
எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை...
எங்களின் கொள்கை படி அண்ணாதுரை ஆரம்பிச்ச கட்சியே பெரியார் கொள்கை பிடிக்காமல் தான்...
அண்ணாவிற்கு பிறகு கலைஞர் ஓவ்வொரு மேடையிலும் நான் அண்ணாவின் தம்பி அண்ணாவின் இளவல்... அண்ணா வழங்கிய மோதிரம் தான் எனது மனதுக்கு பிடித்தமான பொருள் என்று பேசியவர் தான் கலைஞர் அவர்கள்..
எனது தந்தையே தி.மு.கவின் பயங்கரமான அனுதாபி தான், அதற்காக நீங்கள் கடவுளே இல்லை என்று சொன்னவரை பற்றி பள்ளியில் பேசுவது சரி அல்ல. உலகில் இருக்கும் எல்லா நாடுகளுமே கடவுள் இருப்பதை நம்புகிறது...உலக ன் ஒவ்வொரு பகுதியிலும் கூட மதத்தின் பெயரால் நடக்கிறது
தமிழக மக்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டு உள்ளனரே தவிர பெரியாருக்கு அல்ல.. நீங்கள் பள்ளி மேடையில் பேசுவதாக இருந்தால் கலைஞர் அண்ணாதுரை அவர்களை பற்றி பேசுங்கள்.அவர்கள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்..
ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வார்த்தைகள். அண்ணாதுரை அவர்களும் பேசியது தான்.
உங்களுக்காக இன்னொரு முக்கியமான தகவலையும் சொல்கிறேன், அதிகமான விநாயகர் கோவில் கட்ட அனுமதி தந்ததும் உங்களின் அரசு தான்.மேலும் சன்டிவி மற்றும் கலைஞர் டிவியில் பல ஆன்மீக நிகழ்ச்சிகள் தான் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இந்து மத நம்பிக்கை தமிழர்களின் வாழ்வில் ஓன்றிப்போனது, அதை யாராலும் அசைக்க இயலாது.
இன்னும் சொல்லப் போனால் வாபரும் ஐயப்பனும் தோழர்கள் தான். கந்தூரி திருவிழாவில் இந்துக்கள் மற்றும் இசுலாமியர்களும் கலந்து கொள்கின்றனர்.
அன்பே உருவான வீரமான துர்க்கையும்.. தமிழ் கடவுள் முருகனும்... தைமாதம் நாங்கள் வணங்கும் சூரியனும்.. ஸ்ரீரங்கநாதரும்..தமிழரின் பெருமையை கடல் கடந்து பரவ செய்த சோழமன்னன்..ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் சிவனும் எங்களின் தெய்வம் தான்..எங்களின் தெய்வங்கள்..
நாங்கள் நடத்தும் கடை மற்றும் வியாபார நிலையங்களில் நுழைந்து பாருங்கள்.
அங்கே ஓரே புகைப்படத்தில் முருகனும்... அல்லாவும்... இயேசு இருக்கிறார்கள்...பணவசதி கம்மியா இருக்கிறது என்று ஓரே ஒரு மாலையை வாங்கி அந்த படத்திற்கு ஓன்றாக போட்டு வழிபடும் சாதாரண மக்கள் நாங்கள்..
நாங்கள் மதங்களை கடந்தும் மனித நேயத்துடன் சகோதரர்களாகவே வாழ்கிறோம்..
எங்களுக்கு எல்லா மதமும் சம்மதமே.. ஆனால் கடவுள் இல்லை என்பதை மாத்திரம் எங்களால் ஏற்க இயலாது..
No comments:
Post a Comment