ஆயிரம் கெடு பிடி

கருவறையில் இருக்கும் சிலையை கல் என்றனர்.. ஆனால் கூரையே இல்லாத சிலையை ரோட்டின் நடுவே நிறுவி ஓவ்வொரு ஆண்டும் அந்த சிலைக்கு மாலை போட்டு போட்டோ எடுக்க மாபெரும் போட்டி..பகுத்தறிவை சற்று நேரம் தலையில் இருந்து கழற்றி வைத்தனர் போலும்...என்றோ இறந்த போன மனிதனின் பெயரால் போக்குவரத்து நெரிசல்...பிரசவ வலியில் ஆம்புலன்ஸ் உள்ளே துடிக்கும் பெண்.... நேரத்துக்கு அலுவலகம் செல்ல இயலாமல் தவிக்கும் பலர்.. ஏற்கனவே ஊர்ந்து செல்லும் சாலையில் எதற்காக யாரை திருப்தி படுத்த இந்த போலியான நாடகம் என்றே தெரியவில்லை...ஏனோ அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் சிலையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இதுவரையில் வந்ததில்லை... ஓரே ஓர் நாள் வீதியில் வலம் விநாயகருக்கு ஆயிரம் கெடு பிடி...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...