மிகப்பெரிய வயிறு...
கைகளில் சிறு இனிப்பு...
யானையின் முகம்...
குழந்தையின் குணம்...
எளிமையான வழிபாடு..
பல நல்ல தொடக்கத்தின்
தலைவன் ....
அமைதியின் உருவகம்...
அன்பின் வெளிப்பாடு...
ஆசைகள் ஏதுமின்றி
இருந்தவனை கல்யாணம்
செய்யச் சொல்லி
வற்புறுத்திய சொந்த பந்தங்கள்
சில சந்தர்ப்பங்களில்
அதிகமாகவே கோபம்
காட்டும் அப்பா... அவரின்
மென்மையான மனதும்.
கேட்டதை விட அதிகமாக
அள்ளிக் கொடுக்கும் தன்மையும்
அனைவருக்கும் தெரியாது...
பித்தன் என்று கேலி பேசும்
அவரின் நிலை புரியாத பலர்
பணத்தை கேட்ட குபேரனிடம்
தனது எல்லா செல்வத்தையும்
எடுத்துக் கொடுத்து விட்டு
தியானத்தில் அமர்ந்தவர்
அந்த பணத்தைத் தான்
பிற்காலத்தில்
திருப்பதியில் கோவில்
கொண்ட பெருமாளுக்கே
வட்டிக்கு கொடுத்தான்
சிலருக்கே புரியும்...
அம்மாவும் அப்பாவும்...
தான் இவருக்கு எல்லாமும்......
மயில் மீதேறி உலகை
நொடியில் வலம் வரும்....
வள்ளி தெய்வானையின்
மணவாளன்
மருதமலை முருகனின்
பாசக்கார அண்ணன்..
கல்யாணத்தின் தேவை அறிந்து
மரத்தடியில் அமர்ந்தவன்...
ஆற்றின் கரையிலும்...
அரச மர நிழலிலும்
அன்பிலும் பண்பிலும்
சிறந்த தனது
அம்மாவை போலவே
பெண்ணை தேடியதாக
என்றுமே பாட்டி சொல்லும்
கதைகளின் கதாநாயகன்...
ஒளவையின் இஷ்டதெய்வம்...
வியாசரிடம் போட்டியிட்டு
தனது தந்தம் ஓடித்து...
எழுதிய மகாபாரதம்...
அத்தனைக்கும்
சொந்தக்காரன்
இந்த விநாயகர்
No comments:
Post a Comment