சமர்ப்பணம்

 மரணம் என்பது மனித வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட ஓன்று, ஆனால் அது என்று நிகழும் என்பது தெரியாத காரணத்தால் மனிதன் ஆணவத்தில் அலைகிறான்.

மனிதனின் ஆயுள் தெரிந்து விட்டால், வாழ்வின் சுவாரசியமானது, மிகவும் குறைந்து போகும். 

இறைவன் இருக்கிறாரா? இல்லையா என்ற விவாதம் தாண்டி யோசித்தால் புரியும்.

கடவுளை விழுந்து விழுந்து கூப்பிட்டவரும், இறைவனே இல்லை என்று வாதிட்டவரும் மரணத்திற்கு பின் என்ன நிகழும். அதிகமாக பேசவில்லை.

விடை இல்லா கேள்வி இது.

பூமியின் மடியில் வாழும் சில வருட வாழ்வில், முடிந்தால் நன்மை செய்யுங்கள். முடியாவிட்டால் அடுத்தவரை சாதி மத இனத்தின் பெயரால் உதாசீனம் செய்யாதே என்பதே பலரின் உணர்வுகள்.

நிலையற்ற உலகில் நிலையான இடம் ஓரு சிலருக்கு மாத்திரமே கிடைக்கிறது.

ஏனென்றால் அவர்கள் தனக்காக வாழவில்லை, தன்னை சார்ந்த மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.

அவர்கள் இறைவனை பார்த்தார்களா? பேசினார்களா? 

அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஆயினும் ஏழைகளின் முகத்தில் இறைவனை காண வேண்டி, அவர்கள் செய்த தவம். இன்று மனிதனை மனிதனாக மதிக்கும் நிலை உருவானது.

தனக்காக எதுவுமே பணம் சேர்க்காமல் வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்.

நிச்சயமாக இப்படி பொது நலனுக்காக வாழ்க்கை வாழ்ந்த காரணம்.

இயற்கை வழி வரும் மரணம்.

உலகில் பிறந்து விட்டோம், என்பதற்காக வாழாமல். குறுகிய காலத்தில் மனித உயிரை உலகுக்கு தந்து விட்டு சென்ற அவர்கள். இன்றும் அவர்கள் மரணத்தை தாண்டியும் வாழ அவர்கள் செய்த அளப்பரிய பணியே காரணம்..

மரணத்தை பற்றிய சிந்தனை தான், மனிதனை சாதிக்க வைக்கின்றது.

ஓட்டம் என்று நிற்கும் என தெரியாத நிலையில், ஓவ்வொரு நாளும் நன்மை செய்ய தூண்டுகோலாக அமைந்தது.

நீர்க்குமிழி வாழ்வு, வாழும் நாளில் பிறருக்காக வாழும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்

 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...