உண்மையான நட்பு.

உண்மையான நட்பு என்றால் கண்ணீரை துடைப்பது மட்டுமல்ல.

ஓர் முறை தெரியாமல் மனத்தை காயப்படுத்தி அழ வைத்து விட்டோம் என்று நினைத்து மீண்டும் பல முறை நண்பன் எத்தனையோ கேலி கிண்டல் வம்பு செய்தாலும் பொறுமையாக இருப்பது... மீண்டும் கோபமாக பேசி அவன் கண்ணீர் விட கூடாது என நினைப்பது தான்.. உண்மையான நட்பு...

நட்பு என்பது விட்டுக் கொடுப்பது, தனது நண்பனின் வளர்ச்சி கண்டு சந்தோஷம் கொள்வது. தனது நண்பன் தவறான முடிவு எடுக்கும் போது, அதை அவனுக்கு புரியும் படி சொல்லி நல்வழிப்படுத்த முயற்சி செய்வது.

நட்பின் இலக்கணம் என்பது திருவள்ளுவர் சொல்வது போல,

உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

ஏனோ இவை இப்போது எல்லாம் மேடை பேச்சுக்களுடன் முடிந்து போகிறது, சில மேல் தட்டு வர்க்கத்தினர் மத்தியில்.

பாராட்டு விழா மேடையில் உடன் இருப்பவரை, வானளாவிய புகழை அடைந்தது போல பேசி முடித்து விட்டு காரில் வரும் போது. தனக்கு நெருக்கமானவர்களிடம் இவனுக என்னத்தை சாதிச்சு விட்டான் தெரியலை. அவன் கையில் காசு இருக்கிறதாலே பத்து பேர் புகழ்ந்து பேசுறானுங்க.

ஜயா, உங்க கையிலும் நாலு காசு இருந்தா, இப்படி பத்து பேரு மேடை ஏறி பேசுவாங்க. கலிகாலம் என்ன செய்ய சொல்லுறீங்க ஜயா.உண்மையை சொன்னா, உங்களுக்கு தான் இந்த பட்டம் கொடுக்கணும். நேத்து வந்த சின்னப்பையனுக்கு மாலை மரியாதை கிடைப்பது பார்த்தால் எனக்கே கோபம் கோபமாக வருது. நான் இப்படி நியாயம் பேசுவதால் தான், ஜயா என்னை யாரும் உடன் சேர்ப்பதே இல்லை.. என்கிறார் காரில் உடன் வந்தவர்.


இதே போல ஓர் நிகழ்வு எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் நடந்தது. தன் நண்பரை தவறாக பேசியவர்களை காரில் இருந்து இறங்கி விட்டார்.அதற்கு காரணம், ஒருத்தர் இல்லாத போது அவரை குறை சொல்பவர்கள் தவறு என்ற சிந்தனை.

இப்படி பல உதாரணங்கள் நண்பர்கள் வாழ்வில் ஏராளம்.

நட்பிற்காக சுயநலம் இல்லாமல் பழகும் மனிதர்கள் உலகில் உண்டு.ஆனால் உலகம் பொதுவாக அவர்களை இளிச்சவாயன் என்றே அழைக்கிறது.

நட்பில் வெறுப்பு, எரிச்சல் வருவதில்லை, ஆனால் அதில் அக்கறை அதிகமுண்டு எனவேதான் நண்பர்களுக்கு இடையே சச்சரவு வருகிறது, ஆனால் அது சண்டையாக மாறாமல் பாசமாக மாறுகிறது.

"நான் சொல்வது போல் கேளு", என்ற அன்பின் அதிகாரம் நட்பின் பலத்தை அசைத்து பார்க்கிறது.


ஆயினும் நட்பே வெல்கிறது...


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...