மகனும் மருமகளும்

மகனும் மருமகளும்..

.


குண்டு பாப்பா என்று  சொல்லி அவளின் கன்னங்களில்


முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தும்


பாட்டி.


சில நிமிடங்களில்  குழந்தை போல மாறி விடுகிறாள்.


பேத்தியின் பிள்ளைத்தனமான செல்லமான செயலை கண்டு..


ஏய் குண்டம்மா, என்ற சொல்லை பாசமுடன் ரசிக்கும் குண்டு பாட்டி..


பாட்டி பேத்தி உறவில் கூட தினமும் சண்டைகள் உண்டு.ஆனாலும் யாரும் கோவித்து கொண்டு, தனது அம்மாவிடம் குறை சொல்வதில்லை..


உடன் படிக்கும் நட்பை போலத்தான் இந்த உறவுகள்...


கோவிலுக்கு போனவள் திருப்பி வர தாமதமாகும் நாட்களில், ஏன் கிழத்தை தனியா அனுப்பின..நீ சும்மா தானே வீட்டில் இருக்கே கூட போனா, உனக்கு பவிசு குறைச்சா போகும்...


உன் மாமியார் கூட போக வேண்டியது தானே...ஏன்தான் என்உசுர வாங்குறே..


இவள் எங்கேயாவது கீழே விழுந்து தொலைச்சா, நம்ம எல்லாருக்கும் தானே கஷ்டம், அப்பாவுக்கு தலைவலி அதிகமாகும்..


.

அவளுக்கு எவ்வளவு சொன்னாலும் அறிவே இல்லை... இந்த மழை நேரத்தில் கோவிலுக்கு போக வேண்டிய கட்டாயமா???


.


வீட்டிற்குள் பாட்டி நுழையும் போது, பேச்சை மாற்றினாள்... நீ வயசான காலத்துல வீட்டில் அடங்கி ஒடுங்கி கிடக்க வேண்டியது தானே...


பாரு உன்னால அம்மாவுக்கு எவ்வளவு மனசு கஷ்டம் என்று அம்மாவின் மீது பழி போடுவாள்..


.


.


பேத்தி கல்லூரியில் இருந்து வர நேரமானாலும் பாட்டியின் பாடு திண்டாட்டம்...


இவனுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது..

எல்லாம் என் மகனைத் தான் சொல்லுறேன்...

அப்படி இவ என்ன பொல்லாத படிப்பு படிக்குறா???

ஈஸ்வரா, ஏன்ப்பா என் வயித்துல புளியை கரைக்காதே..அவளை சீக்கிரம் வீட்டில் கொண்டு வந்து விடு.இந்த முறை உனக்கு பிரதோஷத்துக்கு பால் அபிஷேகம் பண்ணுறேன்..


ஊர் உலகம் எப்படி இருக்கும்...


எதுக்கு இப்போ ஸ்பெஷல் க்ளாஸ்...


வீட்டில் இருந்து படிச்சா, படிப்பு மண்டையில் ஏறாதா???


என் கவலை இங்கே யாருக்கு புரியுது...


வராண்டாவில் அவள் வரும் வரை வாசல் படியில் அமர்ந்து கொண்டு இருக்கும் பாட்டி...


.


.


.


ஏய்,  குண்டு நேரத்துக்கு மாத்திரை மருந்து சாப்பிட்டு விட்டு படுத்து தூங்க வேண்டிதான்...


வரும் போதே சீண்டுவாள்..


.


.


மழைகாலத்தில் எதிர்பாராமல் வந்த காய்ச்சல், இரண்டு நாள் ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்ட பாட்டி...


வெளியே எங்கேயும் செல்லாமல் கட்டில் கிழவி தூங்குவதை பார்த்தபடி கவலையுடன் ...


.


.


கண்விழித்து பாட்டியின் அருகே சென்று காதோரமாக சொன்னாள்...


உனக்கு நல்லபடியா காய்ச்சல் சரியான பிறகு, நீ நினைச்ச மாதிரியே அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்... சொல்லும் போது வார்த்தை உடைபட்டது...


.


.


ஏய் லூசு, நான் நல்லா தான்டி, இருக்கேன்...


உன் கல்யாணத்தை பார்க்காமல் போக மாட்டேன்.கவலைபடாதே.என்றாள் குண்டு பாட்டி..


.


.


ஜன்னலோரமாக நின்ற படி இதை பார்த்து ரசித்தனர் பாட்டியம்மாவின் மகனும் மருமகளும்...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...