ஆசை

 ஆசை....

.

.

மனம் என்னும் குரங்கு தரும் ஆசை...

ஊரை கட்டி ஆண்டுவிட ஆசை..

பல கோடிகள் சேர்ந்து வைக்க ஆசை..

விலையுயர்ந்த காருக்கு ஆசை...

அதிகாரமிக்க பதவிக்கு ஆசை....

பார்ப்பதை எல்லாம் பருகிவிட ஆசை...

மிகப்பெரிய பங்களாவிற்கு ஆசை..

ஆயிரங்களில் தொடங்கிய ஆசை...

விருட்சமாக கோடிகளில் சென்று 

நிறுத்தி விட்டது.... அத்தனையும்

கிடைத்த பிறகு இதில் எதிலும்

நிம்மதி இல்லையென்று ....

இறைவனின் காலடியில்

பணிந்து விட ஆசை.... அந்த

கோவில் பூசாரியோ எதுவுமேயின்றி

ஏழைமையில் நிம்மதியாய் 

வாழ்வது கண்டு அவரை

போலவே மாறிவிட ஆசை... ஆனால்

மனகுரங்கு ஆரவாரம் செய்து

அடங்கி விட மறுக்கிறது...

ஆசைகள் ஆசையாய்

நிறைவேறுவது எப்போது...

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...