ஆசை

 ஆசை....

.

.

மனம் என்னும் குரங்கு தரும் ஆசை...

ஊரை கட்டி ஆண்டுவிட ஆசை..

பல கோடிகள் சேர்ந்து வைக்க ஆசை..

விலையுயர்ந்த காருக்கு ஆசை...

அதிகாரமிக்க பதவிக்கு ஆசை....

பார்ப்பதை எல்லாம் பருகிவிட ஆசை...

மிகப்பெரிய பங்களாவிற்கு ஆசை..

ஆயிரங்களில் தொடங்கிய ஆசை...

விருட்சமாக கோடிகளில் சென்று 

நிறுத்தி விட்டது.... அத்தனையும்

கிடைத்த பிறகு இதில் எதிலும்

நிம்மதி இல்லையென்று ....

இறைவனின் காலடியில்

பணிந்து விட ஆசை.... அந்த

கோவில் பூசாரியோ எதுவுமேயின்றி

ஏழைமையில் நிம்மதியாய் 

வாழ்வது கண்டு அவரை

போலவே மாறிவிட ஆசை... ஆனால்

மனகுரங்கு ஆரவாரம் செய்து

அடங்கி விட மறுக்கிறது...

ஆசைகள் ஆசையாய்

நிறைவேறுவது எப்போது...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...