அடுத்த முதலவர் யார்???
ஓவ்வொரு காலகட்டத்திலும் இந்த கேள்வி விவாதிக்கப்படுகிறது
இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் இன்று வரை இந்த சச்சரவுகள் எல்லா கட்சியிலும் இருக்கிறது.அடுத்தது யார் என்று ஒருவர் இருக்கும் போதே தொடங்குகிறது.
அந்த நாற்காலியில் அமர நினைத்தது, எத்தனை எத்தனை பேருக்கு ஆசை....
முதல்வர் என்பது நாட்டிற்கு மாத்திரம் இல்லை, எல்லா வீடுகளிலும் இந்த சண்டை நடைபெற்றிருக்கிறது.
ஓவ்வொரு வீட்டிலும் கூட நாற்காலி சண்டைகள் நடைபெறுகிறது.
ஏனோ அதன் சத்தம் தான் யாருக்கும் கேட்காதது மாதிரி கடந்து செல்கிறார்கள், அருமை உறவினர்கள்.
சொத்தை பிரிப்பதில் தொடங்கி, அலுவலகத்தில் தன் இருப்பை நிலை நிறுத்துவது வரை சண்டைகள் தொடர்கிறது.
ஆசையே இல்லாத மனிதன் யார்????.
அப்படி யாரையாவது படைத்தது உண்டா.
ஆசையில் பிறந்த வாழ்க்கையில் மக்கள் பதவிக்கு ஆசைபடுவதில் தவறேதுமில்லையே.
குழந்தையாக பிறக்கும் போதே அவனுடன் ஆசையும் சேர்த்தே பிறவி எடுத்து விடுகிறது. பம்பரம் தொடங்கி சைக்கிள் தொட்டு இன்னும் பல வகை... பள்ளி பருவத்தில் ஆரம்பித்த ஆசை விதைகள், பலவற்றை ஆசிரியரே பிடுங்கி போட்டார்....
இந்த வயசுல உனக்கு கதை கேட்க ஆசையா, காதை திருகி தடை போட்டார்.
ஆனால் அவர் பக்கத்து க்ளாஸ் டீச்சரிடம் கேட்டது பேசியது எந்த வகையில் சேரும் என்று புரியாத வயது அன்று.
ஏனோ சில ஆசைகள் வருவதேயில்லை.
பல ஆயிரத்தில் சம்பளம் வேண்டாம், அந்த சம்பளத்திற்கு உள்ளே ஒளித்து வைத்த பதட்டமும், தன் மானத்தை உரசும் விளையாட்டும் வேண்டாம்.
அரசியலில் மட்டுமா பதவிச் சண்டை நிகழ்கிறது.
சின்னஞ்சிறு ச அலுவலகத்தில் ஓர் சிறு பதவிக்கு வந்தவருக்கு கூட, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
ஆசை யாரை விட்டது, சுவாசிக்க வேண்டும் என்று.
.
.
.
ஆசைப்படுவது தவறே இல்லை.
மனிதனுக்கு மனிதன் ஆசையின் அளவுகள் மாறுபடும்.
முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால் மட்டும் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பது போன்ற பிம்பம் எதற்காக ஏற்படுத்தப்படுகிறது...
சுனாமியால்..
கஜா புயலால்..
நோய் வாய்பட்ட...
எத்தனையோ பேருக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்த மக்கள் பலர்...
300 நூறு சம்பாதிக்கும் ஏழை மக்கள் கூட தன் சேமிப்பின் சிறு பகுதியை கொடுத்து உதவியது பற்றியும் பேசுங்கள்..
பக்கத்து வீட்டு மனிதருக்கு உடல்நலம் சரியில்லை என்றால், வேதனைபடும் மனிதர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள்...
...
பதவி என்னும் முள்கிரீடம் தரித்து, சுதந்திர வாழ்வை அடகு வைத்து, வேளைக்கு குறித்த நேரத்தில் சாப்பிட கூட முடியாத பரபரப்பு வாழ்வை தவிர்த்து.
நிம்மதியாய் நமக்கு பிடித்த படி, நாம் நாமாக வாழும் நிம்மதி வாழ்வு.
பணத்திற்கு அதிகாரமும் ஆணவமும் தான் கட்டுப்படும்..
அன்பின் வழியில் யார் மீதும் யாருக்கும் கட்டு போட வேண்டிய அவசியமில்லை...
சாப்பிட்டு முடித்து உடனே, குழந்தை தெருவில் சென்று தான் விளையாடும்..
ஏனென்றால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட அடக்கு முறை பிடிப்பதில்லை.
ஆனால் அரசியலில் நீங்கள் சுதந்திரமா செயல்படவே முடியாது.
பல கோடிகள் பல தலைமுறை சேர்த்து வைக்கலாம், ஆனால் அடுத்த வேளைக்கு உணவை சேர்த்து சாப்பிட முடியாது.
இயற்கை மனிதனை இப்படித்தான் படைத்து இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் எதற்கும் ஆசைப்படலாம் தவறே இல்லை.
ஆனால் ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்பதை புரிந்து கொண்டால் தலைவர் பதவிக்கு சச்சரவுகளும் குறையும்
சுதந்திரமாக அன்பாக வாழ்வதே தவம்..
ஓவ்வொரு நொடியும், மூச்சு விடுங்கள். சுதந்திரமாக படபடப்பின்றி, யாருக்கும் பயப்படாமல், பதவி சுகங்களில் மயங்கி, உங்களின் தனித்துவம் இழந்து விடாதீர்கள். தொண்டராக இருப்பவருக்கு இருக்கும் சுதந்திரம் தலைவருக்கு கிடையாது என்பதை தலைவர் பதவிக்கு செல்லும் வரையில் பலரும் அறிவதில்லை
நன்றாக யோசித்து பாருங்கள், சுதந்திர உங்கள் மூச்சாக மாறட்டும்..தொண்டனா தலைவனா..முடிவு உங்களின் கைகளில்
நீங்கள் அடுத்த முதல்வரா.. அல்லது சிறந்த தொண்டரா....
No comments:
Post a Comment