கருணை வடிவானவளே ?
கருணையே உருவானவளே ?
உணர்ந்த பின்னரே பித்தனை
போலவே சித்தமுடன்
சத்தமாய் புலம்புகிறேன் தாயே
வர வேண்டும் தேவியே
வர வேண்டும் தேவியே
அமைதியும் தூய்மையும்
எனதுள்ளத்தில் வர வேண்டும்
வர வேண்டும் தேவி...
உள்ளத்தில் இருக்கும்
கசடுகளை நீக்கிடவே
வர வேண்டும் வர வேண்டும்
தேவி நீ வர வேண்டும்
செயல்களில்
ஆணவம் நீக்கி
அன்புடன் வாழ வழிசெய்ய
என் இதயத்தில் நீயும் வாழ
வரம் கொடு தாயே..
உன்னையன்றி
உலகில் நிதர்சனம் ஏது...
வர வேண்டும் வரவேண்டும்
நவராத்திரி தாயே...
இல்லத்தின் நடுவே
வீற்றிருக்க வாயேன்
வரமேதும் வேண்டாம்..
வரமேதும் வேண்டாம்
வரத்தின் தந்து நீ என்னை
புரம் தள்ள வேண்டாம்...
மாயையில் வீழ்ந்து
சகதியில் புரள
மனமில்லை தாயே
என் இதயத்தில் உன்
வரவை தந்து விடு தாயே
உன்னையன்றி
உலகில் உகப்பேதும்
உண்டோ...
சாரதி தொடங்கி
பாரதி வழியில்
தொழுகின்றேன் தாயே..
மாயா விளையாட்டின்.
வேதனை வேண்டாம்...
மனிதரில் மானுடம்
காணும் வல்லமை வந்தவளே
வர வேண்டும் வர வேண்டும்
நவராத்திரி தாயே...
No comments:
Post a Comment