சிலருக்குச
சந்தோஷம்..
சிலருக்கு
சங்கோஷம்...
சிலருக்கு
சந்தேகம்...
சிலருக்கு
எகத்தாளம்...
சிலருக்கு
வெட்டிப் பேச்சு.....
சாலையோரத்தில்
கீரை விற்கும் பாட்டியிடம்
மைக் நீட்டி
ஆச்சி ஆட்சி மாற்றம்
சாத்தியமா உங்கள்
கருத்தை சொல்லுங்க....
கூடி நின்ற கூட்டமெல்லாம்
அவளின் பதிலுக்கு
ஆவலாக எதிர்பார்த்து
வேடிக்கை பார்த்தது....
யாரு வந்தாலும்...
வார்த்தைகள்
தட்டு தடுமாறியது
"மருமக என்னை வீட்டில்
சேர்த்துக்மாட்டா"....
கிழிந்த ரேஷன் கடை
புடவையில் மூக்கு
செருமியது....
யாரு வந்தாலும் ....
ஏம்பா வாங்கிறயா...
பத்து ரூபா ஓர் முழம்....
No comments:
Post a Comment