இரவு கொள்ளை

 கணவனும்

மனைவியும்

ஆசையாய்

பேசிக்கொள்ள கூட

நேரமின்றி

பறந்து பறந்து

சம்பாதித்த பணம்

நகையாய் பணமாய்

வீட்டின் பீரோவில்

வைக்கப்பட்டது..

வயதான இரண்டு ஜீவன்

அப்பாவும் அம்மாவும்

முதியோர் இல்லத்தில்...

தன் வீட்டிற்கு எதிரே நின்று

திருடன் 

பத்துநாள் நோட்டமிட்ட 

தகவல் கூட 

போலீஸ் சொல்லித்தான்

தெரிந்து கொண்டாராம்...

கேட்டால் கவனிக்கவில்லை

என பதில் சொல்கிறார்

பல ஆயிரம் சம்பளம்

வாங்கும் அந்த அதிகாரி...

பல வருட உழைப்பு 

கொண்டு சென்றான்

ஓர் நாள் இரவு கொள்ளை




No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...