வரத்தை
கொடுத்து விட்டு
மனைவியின்
காலடியில் விழுந்து
புரண்டார் தசரதன்
அரசியல் காரணம்
புத்திர பாசம்....
சபையின் நடுவே
பாஞ்சாலியின்
சேலை உருவப்பட்டது
பேசாமல் மெளனமாய்
இருந்து விட்ட மன்னன்
திருதராஷ்டிரன் அதுவும்
அரசியல் காரணம்
புத்திர பாசம்...
இன்றும் கூட
தொடருகிறது
விளையாட்டு
மாய விளையாட்டு
புத்திர பாசம்....
பேசாமல் இருக்கிறார்கள்
கலியுக பீஷ்மரின்
புத்திர பாசம்
No comments:
Post a Comment