கடவுளின் அரசியல்

 ஓவ்வொரு நாளும் இரவு தூங்குவதற்கு முன்னால், தன்னை மெய்வருத்தி கடவுளை பிராத்தனை செய்தாள் கவிதா....

கவிதாவின் பக்தியை மிகவும் பெரிதாக நினைத்த கடவுளுக்கு தீடீரென ஓர் ஆசை உதயமானது.

தன் கவலைகளை மறக்கவ அவள் பிராத்தனை செய்தாலும், அவள் தனக்காக எதுவுமே கேட்கவில்லை...

ஓவ்வொரு நாளும் பிராத்தனை முடிவில் அவள் சொல்லும் வார்த்தைகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்தது..

ஆண்டவனே, சிறுவயதில் இருந்தே அப்பாவின் தூண்டுதலால் தினமும் உன்னை வணங்கினால் மட்டுமே இரவில் சாப்பாடு என்னும் புதிய நடைமுறை இடையே வந்தது..வேறு வழியின்றி நானும் தொடங்கிய வழிபாடு, இன்று நடைமுறை பழக்கமானது.

"உன்னை உண்மையாக பிராத்தனை செய்தால், நீ வருவாய், என்று ஓருவர் சொன்னார்.நீ ஏன் இன்னும் வரவில்லை.ஓருவேளை எனக்குத்தான் ஓழுஙஞ பிராத்தனை செய்ய தெரியவிங போல... ஆனால் பெரிய சாமியார் உன்னே வேண்டிய போது எல்லாம் நீ நேரில் பேசுவதாக சொல்கிறாரே, அது உண்மை தானா????"


இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்காக கட்டாயம், அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவளின் தாய் தந்தை எப்போதாவது பிராத்தனை செய்தாலும் அதில் அவ்வளவு உண்மை இல்லை, ஏதோ கடனுக்கு செய்கிறார்கள்...

சரி நாளைக்கு காலையில் அவளை சந்தித்து, இந்த கேள்விக்கான பதில் சொல்ல வேண்டும் நினைத்து கொண்டார்.

மறுநாள் காலை பொழுது புலர்ந்தது..

கடவுளுக்கு எந்த கலர் டிரஸ் போடுவது சந்தேகம் வந்தது...


கதை தொடரும்...


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...