நிம்மதியான
உறக்கமின்றி
நண்பர்களை பிரிந்து
பதட்டமான
சூழ்நிலையில்
பணத்தையும்,
பதவியும் நாடி
உயிரினும்
மேலான
உண்மையான
நண்பர்களை
இழந்து விட்டு,
போலியாய்
பழகும் கூட்டத்தில்
அடுத்து என்ன
நடக்கும் என்பதை
அறிய முடியாத
அரசியல் வாழ்க்கை
எனது நண்பனுக்கு
பிடிக்கவில்லை