மனித நேயம்..


இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய புராணங்களையும் இதிகாசங்களையும் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது...
சிலருக்கு தான் படித்த கதைகளை பிறருக்கு சொல்ல ஆசை....
ஆம் அந்த பேராசை எனக்குள்ளும் இருந்தது....
ஓர் சாமானிய சராசரி வேலையில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானது...
ஆனால் கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி...
கல்யாணம், குடும்பம் என்பதையும் தாண்டி சில நிகழ்வுகளில் தான் மனம் நிறைவு தருகிறது...
இதை சொல்லுவால் என்னை ஓர் பைத்தியக்காரன் போல நீங்களும் நினைக்கலாம்...
ஆனால் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை இதுவே...
இயற்கை படைத்த மனித உயிரை நல்ல செயல்களுக்கு பயன்படுத்துவதே வேதங்களில் சொல்லப்பட்ட விஷயம்...
எனக்கு ஏற்பட்ட சில கசப்பான விஷயங்களை நினைத்து மனம் வேதனையில் துடித்து காவியை கட்டிக் கொண்டு...
பரதேசியாக அலையும் சாமியார்களையும் அவர்களின் கதைகளையும் கேட்டு சில விஷயங்களை புரிய முயற்சி செய்து கொண்டிருந்த தருணத்தில் புரிந்து கொண்ட வாழ்வியல் விஷயங்களே அதிகம்...
என்னுடன் பேசிக்கொண்டு இருந்த ஊர் பெயர் தெரியாத.. சொல்லவும் விரும்பாத பெரியவர்.. சொன்னார்..
தம்பீ நீங்க எழுதுங்க...
உங்களுக்கு எழுதுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற போதும்.. சாமி எனக்கு பேசவே தெரியலைன்னு சிலர் சொல்லுறாங்க..
நீங்க எழுத சொல்லுறீங்களே என்றேன்...
தம்பீ... சித்திரமும் கை பழக்கம்..
செந்தமிழும் நாப்பழக்கம்...
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்...
என்று சொல்லி விட்டு போனார்...
கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்பதே உண்மை.. ஆயினும் உலகம் என்றுமே விசித்திரங்களின் குவியல்...
புவியீர்ப்பு விசையை ஒருவர் நம்பினாலும் நம்பா விட்டாலும்..
வானத்தை நோக்கி வீசப்பட்ட பந்து பூமியை வந்தடைகிறது...
அதைப் போலவே சில கற்பனை கதைகளை போல வருங்காலத்தில் சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன...
கதை எழுதப்பட்ட 60+ ஆண்டுகளுக்கு பிறகு அந்த கதையில் நடந்த நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் உலகில் நடக்கிறது...
இந்த அதிசயங்களின் விதியை நான் பிரமிப்புடன் பார்க்கிறேன்...
அரசியல், ஆன்மீகம், வியாபாரம், வெற்றுகிரக வாசிகளின் வருகை அல்லது வெற்று கிரத்திற்கு மனித சென்று குடியேறுவது என்பது போன்ற ஜனரஞ்சகமான கதை...
என்னை ஓர் எழுத்தாளனாக அடையாளப்படுத்த நினைக்கும் அதே வேளையில்...
இந்த விதமான ஆராய்ச்சி என்னை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது...
எனவே மிகவும் பார்த்த விஷயங்களையும் உணர்ந்த விஷயங்களையும் மாத்திரமே எழுத முயல்கிறேன்.
கடக்கும் அறிவியலும் எனக்கு அவ்வளவாக தெரியாது... ஆனால் மனித உணர்வுகளையும்.அவர்களின் மன அழுத்தம் ஆகியவற்றை மீறி உலகில் சந்தோஷமாக வாழும் மனிதரையும்...தனது கவலைகளை மறக்க பிறருக்காக வாழும் மனிதரையும் பற்றியே எழுதுகின்றேன்....
எனது கதை மற்றும் கவிதைகள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதப்படவில்லை...
எனது கதைகளில் வரும் சம்பவங்கள் யாராவது ஒருவரின் வாழ்வில் நடந்திருந்தால் அது தற்செயலானதே...
நான் பார்த்த சில யதார்த்தமான விஷயங்களை கற்பனை கலந்து படைப்புகளாக செய்கின்றேன்...
மனிதன் பூமியில் வாழும் காலம் மிகவும் குறைவு.. ஆனாலும் ஏனோ மதம், இனம், மொழி என்ற பேதங்கள் எத்தனை எத்தனை....
உலகில் சக மனிதனை சக மனிதனாக நடத்துவோம்....
நமக்கு மட்டும் தான் கவலை இருக்கிறது என்ற மனநிலை மாற்றங்கள்...
ஓவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஆயிரம் கதைகள் புதைத்து கிடக்கிறது...
அவற்றை மறந்தும் மறைத்தும் பிறருக்கு நல்லது நினைத்து வாழும் மனிதரை பாராட்டுவோம்....
வளரட்டும் மனித நேயம்..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...