தவறுகளை
உணர்ந்து
நெழினி பைகளை
தடை செய்தோம்..
பனைமரங்களை
நட்டு கடற்கரைகளை
புயலில் இருந்து
காப்பாற்ற முயன்றோம்...
ரோட்டோரமாக
வெட்டப்பட்ட மரங்களை
வளர்க்க ஆயத்தமானோம்...
இயற்கையை பாதுகாக்க
பலரும் முயலும் இந்த
தருணத்தில் சின்னஞ்சிறு
கிருமியால் உலகத்தை ஏன்
இப்படி அலைகழிக்கிறாயோ
இயற்கையே... மனிதர்கள்
மீண்டும் இயற்கையோடு
வாழ்ந்து விட துடிக்கிறோம்...
வழி கொடு..வலியை அல்ல.
இக்கட்டான வேளையில்
பல இடங்களில் மழையை
பொழிந்து ஏன் வேடிக்கை
காட்டுகிறாய்... இயற்கையே
மீண்டும் புதிய மனிதனாய்
இயற்கையின் காவலனாய்
வாழ மனிதனுக்கு இடம் கொடு.
இயற்கையே. ஆக்சிஜனை
வாரி வழங்கு..மனித குலத்திற்கு
No comments:
Post a Comment