ஒருவனின் பல நாள் கனவு வெளிநாடு போக வேண்டும் என்று... நல்லா படிச்சா போகலாம் என்று படித்து முடித்தான்...பல வருட போராட்டம் ஆனால் வெளிநாடு வாய்ப்பு கிடைக்க வில்லை....
நம் நாட்டில் உடனே எங்கே போய் நம்ம சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்துவோம்
.
. சரியாக நினைச்சீங்க....
அதே இடம் தான்.பல பேர் வாழ்க்கையை சுற்றில் விட்டு..
மரத்தடியில் அமர்ந்த கிளி ஜோசியர்...
கிளி வந்து .... எடுத்து தந்த படம்...
ஆதிசேஷன் மேல் படுத்துக் கொண்டு இருந்த பகவான் விஷ்ணு படத்தை எடுத்து கொடுத்தது.. அருகில் மகாலட்சுமி அவரின் காலை பிடித்த படி....
சார் நான் சொன்னா நம்ப மாட்டீங்க... இங்கே பாருங்கள்..
படத்தை காட்டினான்..
உங்களுக்கு கல்யாண ராசி.. அதுக்கு பிறகுதான் வெளிநாட்டு வாய்ப்புகள் வரும் என்றான்...
அதை நம்பி பெற்றவர்களிடம் சொல்ல.. நல்ல வசதியான வீட்டு பெண்ணை பேசி முடித்தனர்...
இப்போது போய் கேட்டான்...
இப்போது விநாயகர் படம் வந்தது.. சார் உங்களுக்கு பிள்ளை பிறந்த ராசியில் தான் வெளிநாட்டு வாய்ப்பு வரும் அதைத்தான் நான் அப்படி சொன்னேன் என்றான்...
ஒருவகையில் யோசித்து பார்த்தால் பணக்கார வீட்டு பொண்ணு நம்ம பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை.. சரியென்று சென்றான்....
சில வருடங்களுக்கு பிறகு போனான் ...
.
.
சார் இன்றிலிருந்து எண்ணி 184வது நாள் நீங்க ஏர்போர்ட்டில் இரூப்பீங்க.... அப்படி மட்டும் நடக்கவில்லை என்றால் நான் எனது கிளி ஜோசியத்தை விட்டு விடுவேன் சபதம் செய்தான்....
.
.
நாள்களை ஓவ்வொரு தினமும் எண்ணிக்கொண்டே வந்தேன்.. என்ன ஆச்சரியம் 184 வந்து நாள் ஏர்போர்ட்டில் வெளிநாடு செல்ல வேண்டி நின்றுகொண்டு இருந்தேன்...
என் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு கேட்டனர். காண்பித்தேன்....
ஏதோ தீவிரவாதியை பார்ப்பது போல மேலும் கீழும் பார்த்தனர்....
தயவுசெய்து மன்னிக்கவும்....திருப்பி கொடுத்தனர்.....
எடுத்துப் பார்த்தால் அதில் இப்படி இருந்தது ஜோசியக்காரனை தேடிப் பார்த்தேன் கையில் சிக்கவில்லை..... நேராக வீட்டுக்கு வந்தவுடன் ...
இதுக்கு மேல எனக்கு சொல்ல சங்கடமாக உள்ளது.
.
.நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

No comments:
Post a Comment