கடற்கரையில்
கட்டிப்பிடித்து
காதலென்று
நம்ப வைத்த
ஆசை காதலன்...
படகின் மறைவில்
உடலை உரசி
உஷ்ணத்தை
ஏற்றியே நிர்பந்தம்
கொடுத்து
கணவனாக பதவிஉயர்வு
பெற்றவன் ஏனோ
கைப்பிடித்த பின்னர்
நடத்துகிறான்...
வீட்டிற்குள் ஓர்
சம்பளமில்லா
வேலைக்காரி போல....
எப்போதாவது
நினைப்பதுண்டு அந்த
கிழட்டு மாமியாரின்
வேதனை வரிகளை
கடைசி காலத்தில்
படுக்கையில் கிடந்த
அப்பனுக்கு தண்ணீர்
வாளி தூங்கியதை கூட
........... மெளனமானவளின்.
வரிகளை உணர்கிறேன்
கடல் கடந்து அவனுடன்
வாழும் தருணங்களில்...
மாதமொரு முறை...
வெளியே அழைத்து
சென்று இன்பத்தின்
நொடிகளை செல்ஃபி
எடுத்து பலருக்கு
காட்டுகிறான்.தனது
சந்தோஷத்தை...
இப்படித்தான் நடித்தான்
மனதிற்குள் அழுகிறேன்...
காதலை சொன்ன
நேரத்தில் அம்மா
சொன்ன அறிவுரை
மொழிகளை.. ஏண்டி
அவன் ஓரு சரியான
சர்வாதிகாரி...
சொன்னா கேளூ...
பொண்ணும் பையனும்
கூட அவனின் முன்பு
வேதனையுடன்
சிரிக்கிறனர் .. இந்த
பொய்யன் சர்வாதிகாரி
முன்பாக அவரைப்போல
போலியாக அவரின்
வாரிசுகள் கூட அவனைப்போல
சரியான சுயநல
சர்வாதிகாரி...
No comments:
Post a Comment