அன்பே சிவமாய்

உடலில் மங்கை 

தலையில் கங்கை 

அணிந்தே காமத்தின் 

சிந்தையின்றி அளவற்ற 

காதலை மனதில் சுமந்தே 

அன்பை பரப்புகின்றான்..

அவனின் அன்பை

உணரமுடியாமல் 

திக்கித்திணறி பக்தர்கள் 

எண்ணற்ற கோடிகள்..

கோடியை சேர்த்த 

மன்னாதி மன்னரும் 

அவனின் கடைக்கண் 

தேடி அலைகின்றனர்.அவனோ

கண்களை மூடி 

எல்லையற்ற காதலை 

சுமந்தபடி தியானத்தில் 

முழ்கி கிடக்கிறான்...

அவனை வணங்கும் 

எண்ணற்ற பக்தரில்

நானும் ஓருவனை

அவனைப் போலவே 

மெளனத்தின் மீதான 

காதலில் முழ்கிடவே 

தேடுகிறேன் அவனை 

அன்பே சிவமாய் 


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...